Begin typing your search above and press return to search.
மேட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு
மேட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எஸ்.ஏகாம்பரம் கொரானா தொற்றால் உயிரிழந்தார்.
HIGHLIGHTS
சேலம் மாவட்டம், மேட்டூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த எஸ்.ஏகாம்பரம் மூன்று நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் சேலத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அடுத்து இன்று மேட்டூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து காவலர்களுக்கும் கொரானா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் மேலும் இரண்டு காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
அவர்கள் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து மேட்டூர் காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்தனர்.