/* */

மேட்டூரில் விவசாயிகளின் காலவரையற்ற பட்டினி போராட்டம் ஒத்திவைப்பு

காவிரி-சரபங்கா நீரேற்றம் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளின் காலவரையற்ற பட்டினி போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மேட்டூரில் விவசாயிகளின் காலவரையற்ற பட்டினி போராட்டம் ஒத்திவைப்பு
X

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

மேட்டூரில் மேச்சேரி ஒன்றியம், மல்லப்பனூர் பிரிவு, மருத்துவர் லட்சுமி நரசிம்மன் தோட்டத்தில் காவிரி சரபங்கா நீரேற்று திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் காலவரையற்ற பட்டினி போராட்டத்தை துவக்கினர்.

இதனையடுத்து, துவங்கியவுடன் மேட்டூர் தாசில்தார் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் பந்தலுக்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். திட்ட அலுவர் மேட்டூர் சார் ஆட்சியரிடம் திங்கள்கிழமை 24.1.2022 காலை நேரில் சந்தித்து குறைகளை பேசிடலாம், கொரானா காலம் என்பதையும் கணக்கில் கொள்ளுங்கள் எனக் கூறினார்.

இந்த நிலையில் தாசில்தார் மற்றும் டிஎஸ்பி.,யின் வாக்குறுதியை ஏற்று, தற்போது போராட்டத்தை திங்கட்கிழமை வரை ஒத்தி வைத்தனர். கோரிக்கையை ஏற்கவில்லை எனில், 25.1.2022 முதல் காலவரையற்ற பட்டினி போராட்டம் தொடருவோம் என கூறி, தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க தலைவர்கள் தெரிவுத்தனர்.

இதில் பாதிக்கப்படும் விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் குடும்பங்களுடனும், ஆடு மாடுகளுடனும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Jan 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?