/* */

மக்களுக்கு சிரமம் ஏற்படுத்தும் தாலுகா அலுவலகம்: ஊராட்சி தலைவர்கள் ஆட்சியரிடம் மனு

தலைவாசல் தாலுக்கா அலுவலகத்தை பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுத்தும் விதமாக அமைக்கப்படுவதாக ஊராட்சி தலைவர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

மக்களுக்கு சிரமம் ஏற்படுத்தும் தாலுகா அலுவலகம்: ஊராட்சி தலைவர்கள் ஆட்சியரிடம் மனு
X

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த ஊராட்சி மன்ற தலைவர்கள்.

சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியை தனி தாலுகாவாக கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 4 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு தற்போது அரசு நிதி ஒதுக்கி உள்ளது. இதனையடுத்து, தலைவாசல் ஒன்றியத்தில் உள்ள கடைகோடி கிராமமான தேவியாக்குறிச்சி ஊராட்சியில் தாலுகா அலுவகம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தலைவாசல் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி தலைவர்கள் ஒன்று சேர்ந்து தாலுகா அலுவகத்தை தலைவாசல் பகுதியிலேயே கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அனைத்து ஊராட்சி தலைவர்களின் சார்பில் பட்டுதுரை, தலைவாசல், நாவக்குறிச்சி, பெரியேரி, வேப்பம்பூண்டி, வேப்பநத்தம், சிறுவாச்சூர் உள்ளிட்ட ஊராட்சி தலைவர்கள் இன்றைய தினம் சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தலைவாசல் ஊராட்சி மன்ற தலைவர் அசோக், தலைவாசலிலேயே தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு போதுமான இடவசதிகள் இருந்தும், தொலைவில் உள்ள தேவியாக்குறிச்சி பகுதியில் தாலுகா அலுவலகம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சரியான போக்குவரத்து இல்லாத அப்பகுதியில் தாலுகா அலுவலகம் கட்டினால், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாக நேரிடும், எனவே புதிய தாலுகா அலுவலகத்தை தலைவாசலிலேயே கட்டிக்கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 20 Sep 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் தேசிய விலங்கு புலிகள் ஊருக்குள் புகுவது ஏன்?
  2. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  3. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  5. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  6. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  7. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  8. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  9. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  10. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை