Begin typing your search above and press return to search.
தம்மம்பட்டி அருகே கோவிலில் தேனீக்கள் கொட்டியதில் 20 பேர் காயம்
தம்மம்பட்டி அருகே கோவில் வழிபாட்டுக்கு வந்தவர்களை தேனீக்கள் கொட்டியதால் பலருக்கு காயம் ஏற்பட்டது.
HIGHLIGHTS
சேலம் மாவட்டம், ஆத்தூர், தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி சிவன் கோவில் அருகே பெரியசாமி கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு வாழப்பாடி அருகே உள்ள தூக்கியம்பாளையத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் 3 வாகனங்களில் பொங்கல் வைப்பதற்காக வந்தனர்.
கோவிலில் உள்ள மரத்தடியில் அடுப்பு வைத்து பொங்கலிட அடுப்பை பற்றவைத்தனர். அப்போது புகை பட்டதால் மரத்தில் இருந்த தென் கூட்டில் இருந்து தேனீக்கள் அங்கிருந்தவர்களை கொட்டியது. பலர் அலறியடித்து ஓடினர். இதில் 25க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. வசந்தா(55) என்பவர் மட்டும் தீவிர சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.