/* */

சேலத்தில் போலீசார் தாக்கியதில் மரணம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது

சேலம் சோதனைசாவடியில் போலீசார் தாக்கி ஒருவர் மரணமடைந்தது தொடர்பாக சிறப்பு உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்

HIGHLIGHTS

சேலத்தில் போலீசார் தாக்கியதில் மரணம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது
X

கைது (பைல் படம்)

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இடையப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரும், அவரது நண்பர்கள் இரண்டு பேரும் நேற்று, கள்ளக்குறிச்சி, வெள்ளிமலை கிராமத்திற்கு சென்று மது அருந்திவிட்டு, கல்வராயன்மலை வழியாக வீடு திரும்பியுள்ளனர். அப்போது, பாப்பநாயக்கன்பட்டி சோதனைச் சாவடியில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் அதிகரிக்கவே எஸ்.ஐ மற்றும் உடனிருந்த போலீசார், போதையில் இருந்த முருகேசனை தாக்கியுள்ளனர். அதில் முருகேசன் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

முருகேசனை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முருகேசன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி. விசாரணை மேற்கொண்டார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஏத்தாப்பூர் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி கைது செய்யப்பட்டார்.

Updated On: 24 Jun 2021 1:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?