/* */

கடன் வாங்கி மன வளர்ச்சி குன்றிய மகனுக்கு மருத்துவம்; கடும் சிரமத்தில் பெற்றோர்

ஆத்தூர் அருகே மனவளர்ச்சி குன்றிய மகனுக்கு மருத்துவம் பார்க்க முடியாமல் பெற்றோர் அவதிபட்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

கடன் வாங்கி மன வளர்ச்சி குன்றிய மகனுக்கு  மருத்துவம்; கடும் சிரமத்தில் பெற்றோர்
X

 மனவளர்ச்சி குன்றிய கருப்பசாமியுடன் அவரது தாயார் அஞ்சுகம்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட முல்லைவாடி கலைஞர் காலனியில் வசித்து வரும் இந்திரன் அஞ்சுகம் தம்பதியருக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் மனவளர்ச்சி குன்றிய கருப்பசாமிக்கு பல்வேறு மருத்துவமனைகளில் கடன் வாங்கி மருத்துவம் செய்து வருகின்றனர்.

ஆனால் இந்திரன் ஹோட்டலில் கூலி வேலைக்கு சென்று தன் குடும்பத்தை கவனிக்க வேண்டிய நிலையில் சொந்த வீடு இல்லாததால், வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். வருமை நிலையிலும் தன் மகனுக்கு மாதந்தோறும் மருத்துவ செலவுகள் பார்ப்பதில் இந்திரன் மிகவும் சிரமப்பட்டு வருகின்றார்.

மேலும் இவர்கள் இலவச குடியிருக்க வீடு மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட தன் மகனுக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும். சேலம் மாவட்ட ஆட்சியர், ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரிடமும் பல முறை மனு கொடுத்தும் இது வரை அரசு சார்பில் எந்த உதவியும் செய்யவில்லை.

இதனால் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் எங்களின் குடும்ப வறுமை நிலையை அறிந்து மன வளர்ச்சி குன்றிய எனது மகன் கருப்பசாமிக்கு மருத்துவ உதவிகளும், இலவச குடியிருப்பு வீடு வழங்க வேண்டும் என்று அவரது தாய் அஞ்சுகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 28 Aug 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  2. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  10. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி