/* */

தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளித்து சுத்தப் படுத்திய சேலம் நகராட்சி நிர்வாகம்.

HIGHLIGHTS

தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு
X

தமிழகத்த்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது,கடந்த ஒரு வாரமாக தினசரி பாதிப்பு 33 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது, இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இன்னிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகர பகுதியிலும் 2வது அலை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது 350க்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்க்கு பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் ஆத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனோ பெரும் தொற்றால் தினசரி 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனோ தொற்று பரவலை தடுக்கும் விதமாக நரசிங்கபுரம் நகராட்சி ஆணையாளர் ஏற்பாட்டில் ஆத்தூர் தீயணைப்பு வாகனம் மூலம் மக்கள் அதிகம் கூடும் இடங்களான கடைவீதி,நீதிமன்ற வளாகம்,அம்மா உணவகம்,வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நரசிங்கபுரம் நகராட்சி அதிகாரிகள் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 19 May 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?