/* */

முத்துமலை முருகன் கோயிலில் ஏப். 6ம் தேதி கும்பாபிஷேகம்: ஹெலிகாப்டரில் புனித தீர்த்தம்

Salem Muthumalai Murugan Temple-சேலம் அருகே முத்துமலை முருகன் கோயில் கும்பாபிஷேக விழா ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதாக நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

முத்துமலை முருகன் கோயிலில் ஏப். 6ம் தேதி கும்பாபிஷேகம்: ஹெலிகாப்டரில் புனித தீர்த்தம்
X

பிரமாண்ட முத்துமலை முருகன் சிலை. 

Salem Muthumalai Murugan Temple-சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த புத்திர கவுண்டம்பாளையம் பகுதியில் மிகப் பிரமாண்ட முறையில் முத்துமலை முருகன் சிலை அமைக்கும் பணி கடந்த 2016 ஆம் ஆண்டு துவங்கியது. தமிழகத்திலுள்ள பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் மண்ணை எடுத்துவந்து, இந்த திருக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் உள்ள முருகன் கோயில் வடிவமைத்த தியாகராஜர் ஸ்தபதி மூலம் இந்த திருக்கோயில் கட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவிலை உருவாக்கிய தொழிலதிபர் ஸ்ரீதர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உலகிலேயே மிகப்பெரிய முருகன் கோயில் சேலத்தில் அமைந்துள்ளது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற முருகன் திருக்கோயில்களில் மண்ணை எடுத்து வந்து ஆறுபடை முருகன் திருக்கோயில் சிறப்பு பூஜை செய்து பணியை துவக்கியதாகவும், குறிப்பாக திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, திருத்தணி, சுவாமிமலை, பழனி போன்ற திருக்கோயில் மண்ணை கலசத்தில் வைத்து ஒரே நேரத்தில் பூஜை செய்து இந்த திருக்கோயில் வடிவமைத்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

மிகவும் பிரசித்தி பெற்ற இந்த திருக்கோயில் கும்பாபிஷேகம் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும், இந்த கும்பாபிஷேக விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மடாதிபதிகள் கலந்து கொண்டு ஆசி வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார். குறிப்பாக தருமாபுர ஆதீனம் பேரூர் ஆதினம் ரத்தனகிரி சாமிகள் மலேசியாவிலிருந்து பாலகிரிசாமி ஆகிய நான்கு மாடாதிபதிகள் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

மலேசியாவில் உள்ள உள்ள முருகனைப் போன்று தமிழகத்தில் அதுவும் சேலத்தில் அமைய வேண்டும் என்பது எனது தந்தையின் கனவு என்றும் அந்த கனவு தற்போது நிறைவேறி உள்ளதாகவும் தெரிவித்தார். கும்பாபிஷேகத்தை பொருத்தவரையில் சமூக இடைவெளி யோடு சுவாமி தரிசிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

கும்பாபிஷேக தீர்த்தம் அனைத்து பக்தர்களும் மீதும் விழும் வகையில் ஹெலிகாப்டர் மூலம் புனித தீர்த்தம் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் முருகனை ஹெலிகாப்டர் மூலம் அருகில் சென்று பார்க்க பிரத்தியேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், மிகப்பெரிய முத்துமலை முருகன் சாமி வேலி தரிசனம் செய்ய அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும் என வேண்டும் என்றும், முருகனின் அருள் பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

கும்பாபிஷேகத்திற்கு பிறகு தொடர்ந்து பூஜைகள் நடத்த கட்டளைதாரர்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்த அவர், கோவில் நிர்வாகத்தின் சார்பில் அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். சேலம் அருகே மிக பிரம்மாண்ட முறையில் கட்டப்பட்ட உலகிலேயே மிக உயரமான முத்துமலை முருகன் கோயில் கும்பாபிஷேக விழா ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும், ஹெலிகாப்டர் மூலம் புனித தீர்த்தம் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 19 March 2024 5:20 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...