Begin typing your search above and press return to search.
புதுக்கோட்டை தேர் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம்
Temple Chariot - புதுக்கோட்டை கோவில் தேர் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரண உதவி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
HIGHLIGHTS
Temple Chariot - புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோ கர்ணத்தில் நேற்று நடைபெற்ற தேர் திருவிழாவில் எதிர்பாராதவிதமாக தேர் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் காயம் அடைந்தனர். இந்தவிபத்து பற்றி அறிந்த முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் காயம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி இருப்பதோடு அவர்கள் ஒவ்வொருவருக்கும் முதல் அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் பற்றி விசாரித்து உரிய மேல் நடவடிக்கை எடுப்பதற்காக இந்த சமய அறநிலைய துறை அமைச்சரை புதுக்கோட்டைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2