/* */

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுக்கான நேரம் குறைப்பு

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுக்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுக்கான நேரம் குறைப்பு
X

மாதிரி படம்

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி பொதுத்தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டில் நேரடி பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது

அதன்படி 12ஆம் வகுப்புக்கு மே 5-ஆம் தேதி- 28ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறும். அதேபோல் 11ஆம் வகுப்புக்கு மே 9-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையும், 10-ஆம் வகுப்புக்கு மே 6-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெற உள்ளது.

10-ஆம் வகுப்புக்கு ஜூன் 17ம் தேதியும், 12ஆம் வகுப்புக்கு ஜூன் 23ஆம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியாகும். 11ஆம் வகுப்புக்கு தேர்வு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதியும் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25 முதல் மே 2 ஆம் தேதி வரை செய்முறைத்தேர்வு நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது. அத்துடன் மே 4ம் தேதிக்குள் செய்முறை தேர்வு மதிப்பெண்கள் முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுக்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை 3 மணி நேரமாக இருந்த செய்முறைத் தேர்வுக்கான நேரத்தில் ஒரு மணி நேரத்தை குறைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

இனி செய்முறைத் தேர்வுகள் 2 மணி நேரம் மட்டுமே நடத்தப்படும் என்ற அறிவிப்பின் காரணமாக மாணவர்களிடையே பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

Updated On: 23 April 2022 12:23 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி