/* */

குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் படுக்கை வசதி பெட்டிகள் குறைப்பு; பயணிகள் அவதி

கோவையில் இருந்து தினமும் இயக்கப்படும் கோவை-குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில், திடீரென படுக்கை வசதி கொண்ட பெட்டிகளை குறைத்திருப்பது, பயணிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

HIGHLIGHTS

குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் படுக்கை வசதி பெட்டிகள் குறைப்பு;  பயணிகள் அவதி
X

குர்லா எக்ஸ்பிரஸில் பெட்டிகள் குறைப்பால், பயணிகள் அவதிப்படுகின்றனர்.

கோவை - குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்க, இடம் கிடைப்பதே அரிதாக உள்ளது. திருப்பூர் : கோவைக்கும் மும்பைக்கும் வர்த்தக தொடர்புகள் அதிகம் என்பதால், கோவையில் இருந்து தினமும் இயக்கப்படும் கோவை-குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த ரயில் முன்பு, மும்பையின் குர்லாவிலிருந்து பெங்களூரு வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. கொங்கன் ரயில்வே அமைத்த பின், கோவை வழியிலான ரயில்கள் திருப்பி விடப்பட்டன. அதை ஈடுகட்டும் வகையில், 1998ல் அப்போதைய கோவை எம்.பி. சி.பி.ராதாகிருஷ்ணன் முயற்சியால் இந்த ரயில் கோவை வரை நீட்டிக்கப்பட்டது.

இந்த ரயிலில் முன்பு 11 பெட்டிகள், சாதாரண 'ஸ்லீப்பர்' வகுப்பு பெட்டிகளாக இருந்தன. இதனால், நடுத்தட்டு மக்கள், வர்த்தகர்கள் பலரும் இந்த ரயிலில் தொடர்ந்து பயணித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 26 ம் தேதியில் இருந்து, இந்த ரயிலில் அனைத்துப் பெட்டிகளும் எல்.எச்.பி., எனப்படும் அதிநவீன வசதிகளுடைய பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்த மாற்றம் ஒரு வகையில் வரவேற்கத்தக்கதாக இருப்பினும், இதில் சாதாரண ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கை பாதிக்கு மேலே குறைக்கப்பட்டுள்ளது. முன்பு 11 பெட்டிகளில், 720 'ஸ்லீப்பர்' இருக்கைகள் இருந்தன. தற்போது மாற்றப்பட்டுள்ள எல்.எச்.பி., பெட்டிகளில் நான்கு பெட்டிகள் மட்டுமே 'ஸ்லீப்பர்' வகுப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு பெட்டிக்கு 80 இருக்கைகள் என்பதால், 320 'ஸ்லீப்பர்' இருக்கைகள் மட்டுமே உள்ளன. இதனால் 'ஸ்லீப்பர்' இருக்கைகளின் எண்ணிக்கை 400 வரை குறைக்கப்பட்டுள்ளது. இது நடுத்தர வகுப்பினரை பாதிப்பதாக உள்ளது.

இதேபோல வேறு சில ரயில்களில் எல்.எச்.பி., பெட்டிகள் மாற்றப்பட்டபோதும், 'ஸ்லீப்பர்' பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. உதாரணமாக தூத்துக்குடி - மைசூரு -மயிலாடுதுறை ரயிலில், எல்.எச்.பி., பெட்டிகள் மாற்றப்பட்டபோதும் 'ஸ்லீப்பர்' பெட்டிகள் அதே எண்ணிக்கையில் தான் உள்ளது. அந்த ரயில் தென்மேற்கு ரயில்வே மூலம் இயக்கப்படுகிறது. குர்லா எக்ஸ்பிரஸ், மத்திய ரயில்வே மூலம் இயக்கப்படுகிறது.

எனவே, தூத்துக்குடி-மைசூரு-மயிலாடுதுறை ரயிலில் தென்மேற்கு ரெயில்வே அதிகாரிகள் செய்தது போல, குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலிலும் 'ஸ்லீப்பர்' பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது என்று கோரிக்கை விடுக்கப்படுகிறது. குர்லா எக்ஸ்பிரஸ், தொலைதூர ரயில் என்பதால் ஏ.சி.,பெட்டிகளை அதிகம் சேர்த்திருப்பதாக ரயில்வே அதிகாரிகளால் விளக்கம் தரப்படுகிறது. எனவே குறைந்தபட்சம் 'ஸ்லீப்பர்' பெட்டிகளின் எண்ணிக்கையை 7ஆக அதிகரிக்க வேண்டுமென்று கோரப்படுகிறது. இதை மத்திய ரயில்வே மண்டல அதிகாரிகளிடம் கொண்டு செல்ல, இங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் இயக்கத்தில் மாற்றம்

கர்நாடக மாநிலம், மைசூருவில் இருந்து பெங்களூரு, பங்காருபேட்டை வழியாக தமிழகம் வந்து சேலம், ஈரோடு, திருப்பூர், கோவையை கடந்து பாலக்காடு வழியாக கேரள மாநிலம் கொச்சுவேலி வரை தினமும் கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் (16315) செல்கிறது. திருவனந்தபுரம் கோட்டத்துக்கு உட்பட்ட கொச்சுவேலியில் பொறியியல் மேம்பாட்டு பணி , தண்டவாள சீரமைப்பு பணி நடக்கிறது. இதனால் வரும் 10ம் தேதி வரை எர்ணாகுளம் வரை மட்டும் இயக்கப்படும். ஆலப்புழா, காயன்குளம், கொல்லம் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 7 Dec 2022 6:48 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு