/* */

' உண்மையா, என் புருஷனை கொன்னுட்டியா?, வீடியோ கால் செஞ்சு பாடியை காட்டு - கள்ளக்காதலனிடம் கேட்ட 'அன்பான' மனைவி

கணவனை கொன்றுவிட்டதாக கூறிய கள்ளக்காதலனிடம், ‘வீடியோகால்’ செய்து சடலத்தை காட்டுமாறு கூறிய மனைவி, அது உண்மைதான் என தெரிந்ததும், துள்ளி குதித்து சந்தோஷப்பட்டதாக, போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

HIGHLIGHTS

 உண்மையா, என் புருஷனை கொன்னுட்டியா?, வீடியோ கால் செஞ்சு பாடியை காட்டு - கள்ளக்காதலனிடம் கேட்ட அன்பான மனைவி
X

போலீஸ் விசாரணையில் நாடகமாடிய விஜயசாந்தி. (அடுத்தபடம்) கொலை செய்யப்பட்ட கணவர் நவீன்குமாருடன்.

திண்டுக்கல்லில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவியை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுாகா சந்தைப்பேட்டையை சேர்ந்த நவீன்குமார்(35), சாலையூர் நால்ரோட்டை சேர்ந்த விஜயசாந்திக்கும் திருமணமாகி, பத்து ஆண்டுகளாகிறது. இவர்களுக்கு, 8 வயதில் மகனும், 3 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.

நவீன் குமார், வேடசந்தூர் அருகே உள்ள தனியார் இரும்புக் கடையில் லோடுமேனாக பணி செய்துள்ளார். மதுப்பழக்கம் உள்ளவர். தினமும் குடித்துவிட்டு, விஜயசாந்தியிடம் நவீன்குமார் சண்டை போட்டு உள்ளார் இந்நிலையில், நவீன்குமார் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், காட்டுப் பகுதியில் சடலமாக கிடப்பதாக பொதுமக்கள் வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்

வேடசந்தூர் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார், விசாரணை நடத்தினர். இதில், நவீன்குமாரின் மனைவி விஜயசாந்தி முன்னுக்கு முரணாக பதில் அளித்தததை அடுத்து, சந்தேகமடைந்த போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

நவீன்குமாருடன், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த சிவக்குமாரும் இரும்புக் கடையில் லோடுமேனாக வேலை செய்தார். இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, இருவரும் ஒன்றாக மதுபானம் குடிக்க செல்வது வழக்கமாகி உள்ளது. நாளடைவில், நண்பர் என்ற முறையில், சிவக்குமாரை, நவீன்குமார் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். அடிக்கடி வீட்டுக்கு வந்த நிலையில், விஜயசாந்திக்கும், சிவக்குமாருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் தனிமையில், சந்தோஷமாக இருந்துள்ளதாக தெரிகிறது. இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த நவீன்குமார், விஜயசாந்தியை கண்டித்து அடித்துள்ளார்.

இந்த விஷயத்தை, தனது கள்ளக்காதலனுக்கு போனில் தொடர்பு கொண்டு விஜயசாந்தி கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிவக்குமார், நேற்று மாலை கோடாங்கிபட்டிக்கு வந்து நவீன் குமாரை தண்ணி அடிப்பதற்காக தனியே அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நவீன் குமாரின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். அதன்பின், இதுபற்றி விஜயசாந்தியிடம் போனில் கூறியுள்ளார்.

அதனை நம்பாத விஜயசாந்தி, 'பொய் சொல்லாதே, உண்மையாகவே, என் புருஷனை கொலை செய்துவிட்டாயா? வீடியோ கால் செய்து, பாடியை காட்டு' என்று கூறியுள்ளார். இதையடுத்து, சிவக்குமார் தனது போனில், 'வீடியோ கால்' செய்து, நவீன் குமார் கொலை செய்து, சடலமாக கிடப்பதை காட்டி உள்ளார். அதை பார்த்து, அவர் சந்தோஷத்தில் துள்ளி குதித்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலை நடந்த இடத்தில் ஒன்றுமே தெரியாதது போல் நடித்து, தனது நாடகத்தை வெளிப்படுத்திய விஜயசாந்தி போலீசாரிடம் வசமாக சிக்கி கொண்டார். அவரை கைது செய்த போலீசார், தப்பியோடி தலைமறைவான சிவக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளக்காதல் தொடர்பால், தாலி கட்டிய கணவரையே கொலை செய்துவிட்டு, நாடகமாடிய பெண்ணால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On: 23 Oct 2022 7:11 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  3. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  6. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  7. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  8. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  9. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  10. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...