/* */

பானாவரம் அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி

பானாவரம் அருகே மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரி செய்தபோது மின்சாரம் தாக்கி மின் வாரிய ஊழியர் பலியானார்

HIGHLIGHTS

பானாவரம் அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி
X

மின்சாரம் தாக்கி பலியான லைன்மேன் குமரேசன்

ராணிப்பேட்டை மாவட்டம் அடுத்த பானாவரம் அடுத்த மாகானிப்பட்டு கிராமத்தைச்சேர்ந்த குமரேசன்(45),அவருக்கு தனலஷ்மி என்ற மனைவி, மகன், மகள் உள்ளனர்.

குமரேசன், பானாவரம் மின் வாரிய துணைமின் நிலையத்தில் லைன்மேனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் பானாவரம் அடுத்த கோடம்பாக்கத்தில் மழை காரணமாக மின்தடை ஏற்பட்டது, எனவே அங்கு கூட்டுறவு வங்கியின் பின்புறமுள்ள மின்மாற்றியில் பழுதை சரி. செய்யும் பணியில் குமரேசன், ரவி, ராஜா, காமராஜ் ஆகிய 4 பேரும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். .

அப்போது குமரேசனின் உடல் மேலே சென்ற உயர் அழுத்த மின்சாரம் செல்லும் கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து குமரேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்த பானாவரம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 18 Sep 2021 5:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலெனும் காய் கனியானால்...இனிமைதான் போங்கோ..!
  2. சினிமா
    எம்ஜிஆருக்கு ரொம்ப பிடித்தமான உணவு எதுன்னு தெரியுமா?
  3. தேனி
    சூரிய பகவானின் கருணை : வெள்ளரி பிஞ்சு கிலோ ரூ.200 ஆனது..!
  4. கோவை மாநகர்
    தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ; அக்னிசட்டி எடுத்து...
  5. கோவை மாநகர்
    சொத்தை வாங்கிக் கொண்டு தந்தையை விரட்டியடித்த மகன்: நியாயம் வேண்டி...
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டும் அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகள்
  7. கவுண்டம்பாளையம்
    சிறுபான்மையினரை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் காங்கிரஸ் : தமிழிசை
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலி: சிந்தனையைத் தூண்டும் சிறந்த மேற்கோள்கள்
  9. இந்தியா
    இந்தியாவின் ஏவுகணை பலம் தெரிந்து பதுங்கும் நாடுகள்..!
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்