/* */

வாலாஜாவில் நெற்கதிர்களுடன் வேட்புமனு தாக்கலுக்கு வந்த பெண்.

வாலாஜா ஒன்றிய அலுவலகத்தில் வள்ளுவம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிட நெற்கதிர்களுடன் பெண் வேட்புமனுதாக்கல் செய்ய வந்தார்

HIGHLIGHTS

வாலாஜாவில் நெற்கதிர்களுடன் வேட்புமனு தாக்கலுக்கு வந்த  பெண்.
X

வள்ளுவம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட வந்த ரமணி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7ஒன்றியங்களில் உள்ள 13மாவட்டகவுன்சிலர், 127,ஒன்றியகவுன்சிலர் மற்றும் 288ஊராட்சிமன்றங்களின் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிட அரசியல்கட்சியினர் மற்றும் சுயேட்சைகளாகப் அந்தந்த பகுதிகளில் போட்டியிடகடந்த 15ந்தேதி முதல் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம்,ஆற்காடு,சோளிங்கர்,நெமிலி, திமிரி, வாலாஜாப்பேட்டை, மற்றும் காவேரிப்பாக்கம் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் செய்துவருகின்றனர்.,

இந்நிலையில், வாலாஜாபேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பதவிகளுக்கான வேட்புமனுதாக்கலின்போது, வாலாஜா அடுத்த வள்ளுவம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட ரமணி என்பவர் நெற் கதிர்களுடன் வேட்பு மனுதாக்கல்செய்ய வந்தார்..

இருப்பினும் அலுவலகம் முன்பாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ரமணியை தடுத்து நெற்கதிர்களுடன் உள்ளே செல்ல அனுமதியில்லை என்று தடுத்தனர்.அவற்றை வெளியே போட்டு விட்டு உள்ளே செல்லும்படி கூறினர். இதனால் வேறுவழியின்றி, வெளியே போட்டுவிட்டு ரமணி உள்ளே சென்று வேட்பு மனு தாக்கல்செய்தார் .

பின்னர் வெளியே வந்த அவர் ,தனது ஊரின் பிரதானமான தொழில் விவசாயமாகும் . எனவே நான் முழு விவசாயம் வளர்ச்சி ஏற்படுத்தும் வகையில் இயற்கை விவசாயத்துக்கு ஊக்குவிப்பேன் அதற்காக அரசு வழங்கும் நலத்திட்டங்கள் அனைத்தையும் எனது கிராம மக்கள் பெற்றிடும் விதத்தில் பணியாற்றுவேன்.

அரசின் அனைத்து துறை திட்டங்களும் எனது ஊர் மக்களுக்கு அறிந்து பெற்றுக்கொள்ள தகவல் திட்டத்தை செயல்படுத்துவேன். தேவையானால்,நானே முன்நின்று செய்வேன் ஊரின் அடிப்படை வசதிகள் யாவற்றையும் நிறைவேற்ற,ஒரு கிராம தலைவர் செய்யவேண்டிய பணிகள் அனைத்துமே நேர்மையான முறையிலும் வெளிப்படைத் தன்மையுடன் செயலாற்றாடுவேன். நல்ல கிராம தலைவர் இவர் தான் என்று முன்னுதாரணமாக இருப்பேன் என்று அந்த விவசாய பெண்மணி ரமணி கூறினார்.

அப்போது வேட்புமனு தாக்கல் செய்யவந்த திமுக, அதிமுக, பாஜக கட்சியினர் மற்றும் வேட்புமனுதாக்கல் செய்ய வந்த பலர் ரமணியைப் பாராட்டிச்சென்றனர். இந்நிகழ்வு வாலாஜாவில் பரபரப்பையும் வியப்பையும் ஏற்படுத்தியது..

Updated On: 22 Sep 2021 3:20 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  2. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  3. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  5. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  7. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்