/* */

இரத்தினகிரி அருகே காரில் மணல் கடத்தல்..! - 3 பேர் கைது

இரத்தினகிரியருகே பாலாற்றிலிருந்து ஆம்னி காரில் மணல் மூட்டைகளை கடத்திய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

இரத்தினகிரி அருகே  காரில் மணல் கடத்தல்..! - 3 பேர் கைது
X

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் இரத்தினகிரி அருகே உள்ள கீழ்மின்னல் பாலாற்றங்கரை சுடுகாடு பகுதி வழியாக இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது எதிரே வந்த ஆம்னி காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்ய முயற்சித்தனர் அதில் போலீசாரைப் பார்த்ததும் காரை நிறுத்தி விட்டு காரிலிருந்து 3 பேர் தப்பி ஓட முயற்சித்தனர். ஆனால் 3 பேரையும் மடக்கி பிடித்த போலீசார் காரை சோதனை செய்தனர். சோதனையில் அவர்கள் அருகிலுள்ள ஆற்றிலிருந்து மணலை மூட்டைகளாகக் கட்டி காரில் பதுக்கி வைத்து கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

பின்னர் தப்பி ஓட முயன்றவர்களிடம் போலீஸார் விசாரணை செய்ததில் அவர்கள் ரத்தினகிரி அடுத்த கன்னிகாபுரம் தினேஷ்குமார் (27), அஜீத்குமார்(23), மற்றும் கீழ்மின்னலை சேர்ந்த தர்மன்(எ) சூர்யா(20) என்று தெரியவந்தது. இதனை அடுத்து அவர்கள் 3பேரையும் கைது செய்த இரத்தினகிரி போலீஸார் கார் மற்றும் மணல் மூட்டைகளைப் பறிமுதல் செய்தனர்.

Updated On: 18 Jun 2021 12:42 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  2. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  3. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  4. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  5. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  6. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  10. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...