/* */

இராணிப்பேட்டை பஜாரில் திடீரென அறுந்து விழுந்த மின்கம்பி

இராணிப்பேட்டை பஜாரில் கம்பத்திலிருந்து அறுந்து விழுந்த மின்கம்பியை யாரும் மிதிக்காதவாறு வியாபாரிகள் பேரிகாட் வைத்து அசம்பாவிதத்தை தடுத்தனர்.

HIGHLIGHTS

இராணிப்பேட்டை பஜாரில் திடீரென அறுந்து விழுந்த மின்கம்பி
X

அறுந்து விழுந்த மின்கம்பியை யாரும் மிதிக்காதவண்ணம் தடுப்புகள் வைத்த வியாபாரிகள்

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன. அருகே மார்க்கெட் எதிரே பஜார் சாலையிலிருந்து ராஜேஸ்வரி தியேட்டர் வழியாக செல்லும் சாலை உள்ளது. சாலை சந்திப்பு பகுதியில் எப்போதுமே மக்கள் நடமாட்ட அதிகமாக காணப்பட்டு இருக்கும். சந்திப்பின் முனையில் உயரழுத்த மின்சாரம் செல்லும் மின்கம்பம் உள்ளது.

இந்நிலையில் ,திடீரென மின் கம்பத்திலிருந்து கம்பி அறுந்து கீழே விழுந்தது. இதனை கண்ட அங்கிருந்த வியாபாரிகள், பொதுமக்கள் மிதித்து எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் சாலையின் குறுக்கே பேரிகார்டு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் அப்பகுதி வழியே சென்ற வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பினர். மேலும் இது குறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் வந்த மின்வாரிய ஊழியர்கள் அறிந்து விழுந்த மின் கம்பியை இணைக்கும் வேலையில் ஈடுபட்டனர் .

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது..

Updated On: 11 Oct 2021 2:18 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  2. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  3. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  4. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  7. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  8. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  9. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...