/* */

விபத்துகளைத் தவிர்க்க சாலை விதிகளை மதிக்க வேண்டும்: கலெக்டர்

சாலை விபத்துகளைத் தவிர்க்க பாதுகாப்பு விதிகளை மதித்து வாகனங்கள் ஓட்டவேண்டும் வேண்டும் என இராணிப்பேட்டை கலெக்டர் அறிவுறுத்தல்

HIGHLIGHTS

விபத்துகளைத் தவிர்க்க சாலை விதிகளை மதிக்க வேண்டும்: கலெக்டர்
X

இராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கரபாண்டியன்

இராணிப்பேட்டை மாவட்டகலெக்டர் பாஸ்கரப்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசியநெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்டங்களை இணைக்கும் சாலைகளில் அவ்வப்போது நடக்கும் அபாயகரமான விபத்துக்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டு, இதனால் பல குடும்பங்களில் ஆதரவற்ற சூழல் நிலவுகிறது. எனவே, விபத்துகளைத்தவிர்க்க சாலைப்பாதுகாப்பு விதிகளை பின்பற்றி கவனத்துடன் வாகனங்களை இயக்கவேண்டும்.

இதுகுறித்து உச்சநீதிமன்றம் விபத்துக்குக் காரணமானவர்களின் உரிமம் மீது நடவடிக்கைகள் மற்றும் தண்டனைகள் குறித்து உத்தரவுகள் வழங்கியுள்ளது. அதன் அடிப்பையில் விபத்து ஏற்படுத்துபவர்களின் ஓட்டுநர் உரிமம் 6 மாதங்கள் தற்காலிகமாக (அ) முற்றிலும் ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது. அதேபோல வாகனங்களின் அனுமதி சீட்டின்மீதும் தற்காலிக தகுதியிழப்பு மற்றும் நிரந்தரமான ரத்து நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதா தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் தலைக்கவசம் அணிந்தும், நான்கு சக்கரம் ,இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் ஓட்டுபவர்கள் சீட்பெல்ட் அணிந்து இயக்கவேண்டும். அதிவேகங்களைத் தவிர்த்து சாலையில் நிர்ணயித்துள்ள வேகங்களில் செல்ல வேண்டும். கண்கூசும் அளவிற்கு ஒளிரும் விளக்குகளை வாகனங்களில் பொருத்துதல் கூடாது .

தேசிய நெடுஞ்சாலைகளில் மோட்டார் சைக்கிள், இலகுரகம் மற்றும் கனரக வாகனங்கள் என பிரிக்கப்பட்ட வரிசைகளில் செல்லவேண்டும். மாறிச்செல்லும்போது முன்கூட்டியே உரிய சமிக்ஞைகளை செய்து மாற வேண்டும் . கைப்பேசியில் பேசிக்கொண்டு வாகனங்களை இயக்கக்கூடாது, மது அருந்திவிட்டு ஓட்டக்கூடாது. அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு மேல் அதிக பயணிகளை ஏற்றக்கூடாது . சரக்கு வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட பாரங்களை தவிர அதிகம் ஏற்றக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

Updated On: 9 Dec 2021 12:41 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?