காவேரிப்பாக்கம் அருகே டீசல் லாரி கவிழ்ந்து விபத்து
காவேரிப்பாக்கம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி கவிழ்ந்து ரோட்டில் ஆறாக ஓடிய டீசல்
HIGHLIGHTS
காவேரிப்பாக்கம் அருகே கொண்டாபுரம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து ராணிப்பேட்டையை நோக்கி பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றிவந்த டேங்கர் லாரி, பசு மாடுகளின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பசுமாடு ஒன்று பலியானது. நிலைதடுமாறிய லாரி ரோட்டில் கவிழ்ந்து லாரியிலிருந்து டீசல் மற்றும் பெட்ரோல் சாலையில் ஆறாக ஓடியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினர், பாதுகாப்பு துறையை சேர்ந்த தலைமை அலுவலர் லக்ஷ்மி நாராயணன் மாவட்ட உதவி அலுவலர் தீயணைப்பு வீரர்கள், தீப்பிடிக்காமல் இருக்க லாரியின் மீது ரசாயன நுரைக்கலவையை தெளித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
காவேரிபாக்கம் போலீசார் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய பணியில் ஈடுபட்டனர். பின்னர் கிரேன் மூலம் கவிந்து கிடந்த டேங்கர் லாரியை தீயணைப்புப் படையினர் 3 மணிநேர போராட்டத்திற்கு பின் அப்புறப்படுத்தினர்.