Begin typing your search above and press return to search.
ஆதி திராவிட நலப்பள்ளி ஆசிரியர்கள் சார்பில் கொரோனா நிவாரண நிதி
இராணிப்பேட்டை மாவட்ட ஆதி திராவிடநலப் பள்ளி சார்பில் கொரோனா பேரிடர் நிதியாக ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனாத் தொற்றின் 2வது அலையால் முதல்வர் ஸ்டாலின் பொது மக்களிடம் கொரோனா பேரிடர் நிதிகேட்டு கோரிக்கை வைத்தார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க பொதுமக்கள், பொதுத்துறை,தனியார் நிறுவன ஊழியர்கள் தனியார்நி றுவனங்கள்,அமைப்புகள் மற்றும் அரசு ஊழியர்கள் என தங்கள் சார்பில் இயன்றவற்றை கொரோனா பேரிடர் நிதியாக வழங்கி வருகின்றனர்.
அதன் அடிப்படையில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் பணியாற்றிவரும் ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர் சார்பில் கொரோனா பேரிடர் நிதியாக மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜிடம் ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்திற்கான வரைவோலையை வழங்கினர்.