/* */

இராணிப்பேட்டையில் உள்ள பள்ளிகளில் கலெக்டர் ஆய்வு

வாலாஜாப்பேட்டைமற்றும் சுற்றுவட்டாரங்களில் திற்ந்திருந்த அரசு, தனியார் பள்ளிகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

இராணிப்பேட்டையில் உள்ள பள்ளிகளில் கலெக்டர் ஆய்வு
X

பள்ளியில் உள்ள குடிநீரின் தரத்தை பரிசோதிக்கும் கலெக்டர் 

இராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு உத்தரவுபடி 9,10,11மற்றும்12வகுப்புகள் நடத்த பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ,மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், வாலாஜா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அம்மூர் அரசு மேல்நிலைப்பள்ளி, வேலம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் கீழ்புதுப்பேட்டை பிரைட் மைன்ட்ஸ் வித்யோதயா சிபிஎஸ்இ ஆகிய பள்ளிகளுக்கு சென்று பாதுகாப்பு நடைமுறைகளைஆய்வு செய்தார் .

அதில்,அனைத்து வகுப்பறைகளிலும் அரசு வழிகாட்டுதல்படி மாணவ, மாணவியர்கள் அமர வைக்கபட்டுளனரா?, அங்கு, கிருமிநாசினி உள்ளதா? என்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் மாணவ-மாணவிகள் பயன்படுத்தும் கழிப்பறைகளை ஆய்வு செய்து கழிப்பறைகளை மேலும் சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர் மற்றும் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது ஆட்சியர், மாணவ மாணவர்களிடம் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கொரோனா தடுப்பு ஊசி போட்டுள்ளார்களா? என்று கேட்டு, இல்லையென்றால் உடனடியாக போட்டுக் கொள்ளும்படி கூறவேண்டும் என்றார். தடுப்பூசி முகாம்கள் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நடக்கின்றது. எனவே, பெற்றோரிடம், தடுப்பூசி போட அஞ்ச வேண்டாமென தெளிவுபடுத்திட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார.

பள்ளிக்கு வரும்போது ஏதேனும் உடல் பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனே ஆசிரியரிடம் தெரிவித்து விரைந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், மாணவர்கள் அச்சப்படாமல் பள்ளிகளுக்கு வர அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது . குறைகள் இருந்தால் உடனடியாக ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும் சிறப்பாக கல்வி கற்க வேண்டும் என்றும் அறிவுரைகளை கூறினார்

இதனையடுத்துமாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் குறித்தும் மின் விளக்குகள் , மின்விசிறிகள் அனைத்து வகுப்பறையிலும் உள்ளது உள்ளிட்ட அனைத்தையும் ஆய்வு செய்து அறிக்கையை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

ஆய்வின்போது முதன்மைக் கல்வி அலுவலர் அனிதா, மாவட்டக்கல்வி அலுவலர் அருளரசன்,வாலாஜா வட்டாட்சியர் ஆனந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 1 Sep 2021 5:20 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    சிவில் சர்வீஸ் தேர்வில் 851-ஆவது ரேங்க் எடுத்து தென்காசியை சேர்ந்த...
  2. உலகம்
    ஒரு கண்ணில் வெண்ணை! மறு கண்ணில் சுண்ணாம்பு! நெஸ்லேயின் தகிடுதத்தம்
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை குளிர்விக்கும் இயற்கை உணவுகள்
  4. குமாரபாளையம்
    அரசு மருத்துவமனைக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய ஜவுளி
  5. உலகம்
    உலக பாரம்பரிய தினம் எதுக்கு கொண்டாடறோம் தெரியுமா..?
  6. உலகம்
    துபாயில் வெள்ளம்: விமான சேவை ரத்து! தண்ணீரில் சிக்கிய வாகனங்கள்
  7. உலகம்
    எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பிள்ளைக்கு நீங்கள் 'சூப்பர் ஹீரோ'வா?
  9. தேனி
    தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களே.. உங்களுக்கு ஒரு பணிவான...
  10. தேனி
    கைகளில் மருதாணி, மெகந்தி போட்டவர்களும் வாக்களிக்கலாம்!