வாலாஜா அருகே கார் விபத்து: 2பேர் படுகாயம்
வாலாஜா டோல்கேட் அருகே நின்றிருந்த கார் மீது மற்றொரு காரின் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 2பேர் படுகாயமடைந்தனர்.
HIGHLIGHTS
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த முப்பது வெட்டி அருகே உள்ள காலஸ்திரியான் பேட்டைச் சேர்ந்த வெங்கடேசன். இவர் தனது மகள் இந்து அவரது குழந்தையுடன் சென்னைக்கு செல்வதற்காக ஆற்காட்டிலிருந்து காரில் புறப்பட்டு வந்தார். பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாலாஜாப்பேட்டை டோல்கேட் அருகே உள்ள ஒரு ஓட்டல் எதிரே காரை நிறுத்தி விட்டு ஓட்டலில் டிபன் சாப்பிடச் சென்றனர்.
அப்போது அதே சாலையில் வந்த மற்றொரு காரின் டயர் எதிர்பாராதவிதமாக வெடித்தது. அதில் கட்டுப்பாட்டை இழந்த கார், சுமார் 10அடி உயரத்திற்கு பறந்து நிறுத்தியிருந்த கார் மீது மோதி சினிமா படக் காட்சி போல் விழுந்து விபத்துக்குள்ளானது.
அதில் அந்த காரில் வந்த 7பேரில் 2பேர் படுகாயமடைந்தனர். உடனே அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள வாலாஜா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்கு வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். இவ்விபத்துக் குறித்த தகவலறிந்த போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.