/* */

குற்றவழக்கில் கைதான இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைப்பு.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபட்ட இருவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க கலெக்டர் உத்தரவு

HIGHLIGHTS

குற்றவழக்கில் கைதான இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைப்பு.
X

இராணிப்பேட்டையில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள்

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மேல்ஆவதம் கிராமத்தைச்சேர்ந்த புஜ்ஜி (எ) முனிசாமி, கொலைவழக்கில் கைது செய்யப்பட்டுள்ளான்.

அதேபோல, இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த இரத்தினகிரி காவல் எல்லைக்குட்பட்ட சாம்பசிவபுரம் கிராமத்தைச்சேர்ந்த ஜெயவேலு மகன் மாணிக்பாஷா( 24) கள்ளச்சாரயம் காய்ச்சி விற்றதாக கைது செய்யப்பட்டுள்ளான்.

இந்நிலையில், இருவரும். மேற்கொண்டு குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் விதமாக இருவரையும் குண்டர்தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்தியன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் ,இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்,குற்ற வழக்கில் செய்யப்பட்டுள்ள புஜ்ஜி (எ) முனிசாமி, மாணிக்பாஷா இருவரையும் குண்டர்தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையிலடைக்க உத்தரவிட்டார்..

Updated On: 21 Aug 2021 3:37 AM GMT

Related News