/* */

ராணிப்பேட்டை ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 81 சதவீத வாக்குப் பதிவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதற்கட்டமாக 3 ஒன்றியங்களில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 81% பேர் வாக்களித்தனர்.

HIGHLIGHTS

ராணிப்பேட்டை  ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 81 சதவீத வாக்குப் பதிவு
X

ராணிப்பேட்டையில் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிதேர்தல் 6ந்தேதி,9ந்தேதி என்று 2கட்டங்களாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

.அதனையொட்டி இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 7 ஒன்றியங்களில் முதற்கட்டமாக ஆற்காடு,திமிரி ,, வாலாஜாப்பேட்டை ஆகிய ஒன்றியங்களில் உள்ள 6 மாவட்டகவுன்சிலர்கள்,56 ஒன்றிய கவுன்சிலரகள், ௧௩௨ ஊராட்சி தலைவர்கள் ,மற்றும் 816 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடந்த்து.


அதில், வாலாஜாவில்36,ஆற்காட்டில் 61பேர் மற்றும் திமிரியில்74, என 171பேர் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டனர் .மீதமுள்ள பதவிகளுக்கு வாலாஜா 240 ,ஆற்காடு 187,திமிரி 226 என 3 ஒன்றியங்களில் 653 வாக்குச்சாவடிகளில் காலை7மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. ஆங்காங்கே கட்சியினர்,மற்றும் சுயேட்சை ஆதரவாளர்களிடையே சலசலப்புகள் ஏற்பட்டது

இருப்பினும் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர்அதிகாரிகள் நேரில் சென்று அவற்றை சரிசெய்ததில் எந்த வித அசம்பாவிதங்களுமின்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது .

தேர்தலில் ,96 கிராமங்களில் 196 பதற்றமான வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டு அம்மையங்களை மத்திய அரசின் தேர்தல் நுண் கணகாணிப்பாளரகள் வாக்குப்பதிவு மையங்கள் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுபட்டனர்..

மேலும் , உயர்நீதிமன்ற உத்தரவின்படி வாக்குப் பதிவு மையங்களில் உள்ளேயும் வெளியேயும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. அவற்றை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் பார்வையிட்டார்.

அதேபோல ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ஒரு தேர்தல் பார்வையாளர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் வாக்குப் பதிவுகளை கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில்,ஆற்காடு ஒன்றியத்தில் மொத்தமுள்ள 86686பேரில் 187வாக்கு மையங்களில் 72138பேர் வக்களித்து 83சதவீத வாக்குகள் பதிவானது.

திமிரி ஒன்றியத்தில் 85893பேரில் 71637பேர் வாக்களித்ததில் 83சதவீதமும், வாலாஜா ஒன்றியத்தில்127786 ல்99189 வாக்குகள் பதிவாகியது.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு,திமிரி,மற்றும் வாலாஜா ஆகிய ஒன்றியங்களில் முதற்கட்டமாக நடந்த தேர்தலில் 242964 பேர் வாக்களித்ததில் சராசரி மொத்தப்பதிவாக 81சதவீத வாக்குகள் பதிவானது.

தேர்தல் முடிவடைந்ததும் வாக்குப் பெட்டிகள் சீலிடப்பட்டு ஒன்றியங்கள் ஆற்காட்டில் ஜிவிசி கல்வியியல் கல்லூரி ,திமிரி ஆதிபராசக்தி கலைக்கல்லூரி , வாலாஜா இராணிப்பேட்டை பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் வைக்கப்பட்டது.

பின்னர்,பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகள் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பாஸ்கரப்பாண்டியன் முன்னிலையில் சீலிடப்பட்டது.

தற்போது அவை வாக்கு எண்ணிக்கை தினமான 12 ந்தேதி வரை 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Updated On: 7 Oct 2021 2:44 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?