ராணிப்பேட்டை மாவட்டத்தில் 557 மாணவ, மாணவியர்கள் நீட் தேர்வு எழுதினர்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 மையங்களில் நடந்த நீட் தேர்வை 557 மாணவ, மாணவிகள் எழுதினர்.
HIGHLIGHTS
இராணிப்பேட்டை சிப்காட் அடுத்த பெல் குடியிருப்பில் உளள் டிஏவி தனியார்பள்ளி ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் குளோபல் தனியார் பொறியியல் கல்லூரி ஆகிய 2 ,மையங்களில் தேர்வு எழுத இன்று காலை 11முதல் மாணவ,மாணவியர்கள் அனுமதிக்கப்பட்டனர். பிற்பகல் 2மணிக்கு தேர்வு தொடங்கியது.
பெல் டிஏவியில், 360 பேர் எழுதவேண்டிய நிலையில் 334மாணவ,மாணவியர்கள் தேர்வு. எழுதினர்அதேபோல மற்றொரு மையமான மேல்விஷாரம குளோபல் பொறியியல் கல்லூரியில் 240க்கு 223 மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், மாவட்டத்தின் 2மையங்களிலும் நடந்த தேர்வில் 43பேர்ஆப்சென்ட் ஆகியதில் 557 ,மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர்.
தேர்வுகளில் பங்குபெற்றவளுக்கு பேருந்து வசதிகள்,மருத்துவ வசதி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளனைத்தையும் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது..