/* */

குட்டையில் துணி துவைத்தபோது நீரில் மூழ்கி பெண் உயிரிழப்பு

ரத்தினகிரி நந்தியாலத்தில் உள்ள கல்குவாரி குட்டை நீரில் முழ்கி பெண் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

குட்டையில் துணி துவைத்தபோது நீரில் மூழ்கி பெண் உயிரிழப்பு
X

இராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரி அடுத்த நந்தியாலம் அருகே குறிஞ்சி நகர் பகுதியில், கைவிடப்பட்ட நிலையில் கல்குவாரி குட்டை உள்ளது. அதில், அதே பகுதியை சேர்ந்த இந்திரா என்பவர் துணி துவைப்பதற்காக சென்றார். இரவு ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை .

அவரது உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர், இந்திராவை இரவு முழுவதும் தேடிவந்துள்ளனர். இருப்பினும் கிடைக்கவில்லை. ரத்தனகிரி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். புகாரின்பேரில் தேடிவந்த போலீசார் அங்குள்ள கல்குட்டையில் தேட, ஆற்காடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். .

தீயணைப்பு மீட்பு படையினர், கல்குட்டையில் இந்திராவைத் தேடும்பணியில் பணியில் ஈடுபட்டனர் . சுமார்4 மணிநேர தேடுதலுக்குப் பிறகு, குட்டையில் இருந்து சடலமாக இந்திரா மீட்கப்பட்டார். அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இரத்தினகிரி போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 22 Oct 2021 9:37 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    கிரஷ் என்பதும் காதல் என்பதும் ஒன்றா? அல்லது இரண்டிற்கும் வித்தியாசம்...
  3. டாக்டர் சார்
    மன அழுத்தம் மொத்த நோய்களுக்கும் வித்திடும்..!
  4. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள்...
  5. வீடியோ
    Setting Game விளையாடும் திமுக, அதிமுக குற்றச்சாட்டும் Annamalai...
  6. மதுரை மாநகர்
    மதுரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு, அமைச்சர்...
  7. ஈரோடு
    பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 40வது ஆண்டு விழா
  8. திருப்பரங்குன்றம்
    சோழவந்தானில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட விவசாயிகள் கோரிக்கை..!
  9. கல்வி
    ஒரு நாட்டுக்கு கஜானாவை விட உயர்ந்தது எது? அசந்து போவீங்க..!
  10. ஈரோடு
    மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதிகள்: ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர்...