Begin typing your search above and press return to search.
ஆற்காட்டில் விசிக ,கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்
ஆற்காடு பேருந்து நிலையத்தில் மத்திய அரசைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள்கட்சிமற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
HIGHLIGHTS
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்னியூஸ்ட் கட்சிகள் சேர்ந்து பெட்ரோல் விலை ரூ50க்கும், டீசலை ரூ.40க்கும் குறைக்கக்கோரியும், அத்தியாவசியப்பொருட்கள் விலையைக் கட்டுபடுத்தவும், மக்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.7500ஐ வழங்க வேண்டியும் , வேளாண்சட்டங்களைத் திரும்ப பெறுதல், கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்க அனுமதித்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு விசிக நகரசெயலாளர் பாக்யராஜ் தலைமை தாங்கினார், கம்னியூஸ்ட் கட்சி பாலு வரவேற்றார் , விசிக மாவட்டசெயலாளர், அரக்கோணம் விசிக செயலாளர் உட்பட விடுதலைக்கட்சி மற்றும் கம்னியூஸ்ட் கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.