அனுமதியின்றி மது மற்றும் கள் விற்பனை: 3 பேர் கைது...

சட்டவிரோத மதுபானம் தயாரிப்பு, கள் இறக்குதல் மற்றும் அனுமதி இல்லாமல் அரசு மதுபானம் விற்பனையை தடுக்க போலீஸ் நடவடிக்கை

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பு, கள் இறக்குதல் மற்றும் அனுமதி இல்லாமல் அரசு மதுபானம் விற்பனை செய்தல் உள்ளிட்டவற்றை தடுக்க மாவட்ட ஆட்சித்தலைவர் கிளாஸ்டன் புஷ்பராஜ் ஆணை பிறப்பித்திருந்தார்.

ஆட்சியரின் உத்தரவின் பேரில் ராணிப்பேட்டை உதவி ஆணையர் (கலால்) சத்தியவிரசத் அவர்களின் தலைமையில் மாவட்ட கலால் மேலாளர் முருகன் மற்றும் கலால் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சித்ரா தலைமையிலான காவல்துறையினர், ராணிப்பேட்டை உட்கோட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அடங்கிய காவலர்கள் ரோந்து பணி மேற்கொண்டுள்ளனர்.

வாழைப்பந்தல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சொரையூர் மற்றும் பொன்னம்பலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டதில் சட்டவிரோதமாக கள் இறக்கும் தொழில் நடைபெற்று வருவதை கண்டுபிடித்து 1445 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.

மேலும் ஆற்காடு கிராமிய காவல் நிலையத்திற்கு உட்பட்ட புதுப்பாடி ஜிஎம் நகர் மற்றும் ராணிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரை ஆகிய பகுதிகளில் அனுமதி இல்லாமல் அரசு மதுபானம் விற்று வந்த புதுப்பாடி ஜிஎம் நகரைச் சேர்ந்த சின்னப்பொண்ணு, காரை பகுதியைச் சேர்ந்த ராணி மற்றும் மூர்த்தி ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 135 அரசு மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 30 March 2021 12:21 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மற்றும் மதுரை வழியாக காசிக்கு சிறப்பு சுற்றுலா ரயில்
  2. தென்காசி
    தென்காசி அரசு மருத்துவமனையில் இடுப்பு எலும்பு மூட்டு மாற்று அறுவை...
  3. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில், அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்டத்தில், அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. திருவள்ளூர்
    பூட்டி கிடக்கும் நூலக கட்டடத்தை மீண்டும் திறக்க கிராம மக்கள்
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் பாரம்பரிய பயிர் ரகங்களை பிரபலப்படுத்தும் வேளாண்...
  8. கும்மிடிப்பூண்டி
    பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விட கோரிக்கை
  9. நாமக்கல்
    நாமக்கல் அருகே சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்கூடத்தில் தீ விபத்து
  10. திருவண்ணாமலை
    கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க...