/* */

அனுமதியின்றி மது மற்றும் கள் விற்பனை: 3 பேர் கைது...

சட்டவிரோத மதுபானம் தயாரிப்பு, கள் இறக்குதல் மற்றும் அனுமதி இல்லாமல் அரசு மதுபானம் விற்பனையை தடுக்க போலீஸ் நடவடிக்கை

HIGHLIGHTS

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பு, கள் இறக்குதல் மற்றும் அனுமதி இல்லாமல் அரசு மதுபானம் விற்பனை செய்தல் உள்ளிட்டவற்றை தடுக்க மாவட்ட ஆட்சித்தலைவர் கிளாஸ்டன் புஷ்பராஜ் ஆணை பிறப்பித்திருந்தார்.

ஆட்சியரின் உத்தரவின் பேரில் ராணிப்பேட்டை உதவி ஆணையர் (கலால்) சத்தியவிரசத் அவர்களின் தலைமையில் மாவட்ட கலால் மேலாளர் முருகன் மற்றும் கலால் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சித்ரா தலைமையிலான காவல்துறையினர், ராணிப்பேட்டை உட்கோட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அடங்கிய காவலர்கள் ரோந்து பணி மேற்கொண்டுள்ளனர்.

வாழைப்பந்தல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சொரையூர் மற்றும் பொன்னம்பலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டதில் சட்டவிரோதமாக கள் இறக்கும் தொழில் நடைபெற்று வருவதை கண்டுபிடித்து 1445 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.

மேலும் ஆற்காடு கிராமிய காவல் நிலையத்திற்கு உட்பட்ட புதுப்பாடி ஜிஎம் நகர் மற்றும் ராணிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரை ஆகிய பகுதிகளில் அனுமதி இல்லாமல் அரசு மதுபானம் விற்று வந்த புதுப்பாடி ஜிஎம் நகரைச் சேர்ந்த சின்னப்பொண்ணு, காரை பகுதியைச் சேர்ந்த ராணி மற்றும் மூர்த்தி ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 135 அரசு மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 30 March 2021 12:21 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?