சாலையோர குடித்தனம்; சமைக்க வழியின்றி பட்டினி கிடக்கும் அவலம் .

ரத்தினகிரி கீழ்மின்னலில் கல்லுடைக்கும் தொழிலாளிகள் வீடின்றி சாலையோரம் கூடாரத்தில் தங்கி உணவு சமைக்க வழியின்றி பட்டினி கிடக்கின்றனர் .

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
சாலையோர குடித்தனம்; சமைக்க வழியின்றி பட்டினி கிடக்கும் அவலம்    .
X

பிளாஸ்டிக் கூரை அமைத்த குடிசைகளில் வாழும் கல்லுடைக்கும் தொழிலாளர்கள் 

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை தாலூக்காவைச் சேர்ந்த கீழ்மின்னல் பஞ்சாயத்தில் உள்ள இரத்தினகிரி பகுதியில் சுமார 25 ஆண்டுகளுக்கும் மேலாக 30க்கும் மேற்பட்டோர் கல்லுடைக்கும் தொழில்செய்து வருகின்றனர் .

அப்போதிலிருந்து, அவர்கள் தங்க வீடுகளின்றி சாலையாரத்தில் பிளாஸ்டிக் பாய் மூலம் கூடாரம் அமைத்து வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதார்அட்டை, குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்களுக்கு வீட்டுமனைகள் இல்லாமல் சாலைகளில் வசித்து வருகின்றனர்.

இது தொடரபாக அவர்கள் இலவச வீட்டுமனை வழங்கக்கோரி பலமுறை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியருக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது

இதுகுறித்து அங்கு வசித்து வருபவர்கள் கூறும்போது, கடந்த 25ஆண்டுகளுக்கு மேலாக மழை, புயல்,வெயில் போன்ற எல்லாக் காலங்களில் தினமும் சாலையோரம் ஏதாவது ஒரு வண்டி எங்கள் மீது ஏறி விடுமோ பயத்திலேயே வாழ்ந்து வருகிறோம். தற்போதுள்ள மழைக்காலத்தில் குழந்தைகளுடன் தங்குவதற்கு இடம் இல்லாமல் இருக்கிறோம். குழந்தைகளுக்கு உணவு செய்து தருவதற்கு கூட இங்கு எங்கும் காய்ந்த இடம் கிடைக்காததால், காலை முதல் பட்டினியாகவே உள்ளதாகவும் இந்த நிலை தங்களுக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருவதாக தெரிவித்தனர்

இதுபோன்ற மழைக்காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பான பகுதியில் இருக்கும்படி அறிவுறுத்தும் மாவட்ட நிர்வாகம் தங்களைப் போன்றோரை கண்டு கொள்வதில்லை என மிகுந்த மன வேதனையுடன் தெரிவித்தனர்

எனவே தங்களைப் போன்ற தங்குவதற்கு இடமின்றி தவிக்கின்றவர்களுக்கு வீட்டுமனை வழங்கி உதவிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 2021-11-08T21:44:36+05:30

Related News

Latest News

  1. வேலைவாய்ப்பு
    ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள்
  2. சோழவந்தான்
    ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்:...
  3. திருப்பரங்குன்றம்
    மதுரையில் ஏப்ரல் மாதம் முதல் 24 மணி நேர விமான சேவை
  4. தேனி
    தொடங்க போகிறது அரசியல் போர் .. வலிமையுடன் திருப்பி அடிக்குமா திமுக ?
  5. பவானிசாகர்
    ஈரோடு தொட்டபுரத்தில் 46அடி விஸ்வரூப ஸ்ரீ ருத்ர ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில்...
  6. இந்தியா
    36 செயற்கை கோள்களை செலுத்த இந்தியாவிடம் கையேந்தும் பிரிட்டன்
  7. சினிமா
    கல்யாணம் என் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது:...
  8. குமாரபாளையம்
    கோம்பு பள்ளம் தூய்மை பணிக்கு மினி பொக்லின்: நகராட்சி நிர்வாகம்
  9. இந்தியா
    மீனவர்களை பாதுகாக்க க்யூஆர் கோடுடன் ஆதார் அட்டை: மத்திய அரசு
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் சமூக வலைத்தளங்களின் தாக்கம் பற்றிய கலந்துரையாடல்...