/* */

கலவை வளம் மீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை திட்ட அதிகாரிகள் ஆய்வு

கலவை பேரூராட்சியில் இயங்கி வரும் வளம் மீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை திட்ட அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்

HIGHLIGHTS

கலவை வளம் மீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை திட்ட அதிகாரிகள் ஆய்வு
X

கலவையில் உள்ள  வளம் மீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை திட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்

இராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் வாழப்பந்தல் சாலையில் உள்ள பேரூராட்சிக்குட்பட்ட இடத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வளம் மீட்பு பூங்காவை ஒன்றை நிர்வாகம் அமைத்து செயல்படுத்தி வருகிறது. அதில், பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை பூங்காவில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து எடுக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் ,திடக்கழிவு வளாகத்தில் நடந்து வரும் பணிகளை மாநில திடக்கழிவு மேலாண்மை வல்லுநர் டாக்டர் ராஜசேகர் தலைமையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பேரூராட்சி பணியாளர்கள் மூலம் தயாரிக்கப்படும். இயற்கை உரம், மண்புழு உரம், தழை உரம் , ஆகியன தயாரிக்கும் முறைகள் குறித்து ஆய்வு செய்தனர்.

பின்னர், மறுசுழற்சி செய்யத்தக்க பிளாஸ்டிக் பொருட்களை உடைத்து தூளாக்கும் உடைப்பு இயந்திரம் மற்றும் அரைத்து பிளாஸ்டிக் துகள்கள் தார் சாலைக்கு பயன்படுத்துவது போன்ற செயல்பாடுகளை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

ஆய்வின் போது, பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு )சரவணன், தூய்மைப் பணி மேற்பார்வையாளர் சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 26 July 2021 1:42 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்