கலவை நியாய விலைக்கடையில் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கலவையருகே நியாயவிலைக் கடைக்குச் சென்று ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கலவை நியாய விலைக்கடையில் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
X

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கலவையருகே நியாயவிலைக் கடைக்குச் சென்று ஆய்வு செய்தார்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழக அரசின் கொரோனா நிவாரணமாக அரிசி, மற்றும் மளிகைத் தொகுப்பாக பருப்பு,சர்க்கரை எண்ணெய் உள்ளிட்ட 14 பொருட்களைக் கொண்ட தொகுப்பு பைகள், நியாயவிலைக் கடையின் மூலமாக மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது .

அவ்வாறு வழங்கப்படும் பைகளில் சில பொருட்களை விற்பனையாளர்கள் குறைத்துத் தருவதாக மாவட்டத்தில் மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும் சமீபத்தில் இம்மாதிரியான புகாரின் பேரில் கைத்தறிமற்றும் துணிநூல் அமைச்சர் காந்தி நியாய விலைக்கடைகளில் குறிப்பிட்டபடி தொகுப்பு பையில் பொருட்கள் இல்லை என்றால் அப்பைகளை விற்பனையாளரிடமே திருப்பித்தந்துவிடும்படி பொதுமக்களுக்கு அறிவிப்பினை அறிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கலவையருகே கணியனூர் கிராமப்பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைக்குச் சென்று ஆய்வு செய்தார்.ஆய்வில் கலெக்டர் விற்பனையாளரிடம் தொகுப்பு பையில் வழங்கப்படும் பொருட்களின் விபரம், அளவு ஆகியவற்றைக் கேட்டார். பின்னர் கடையினை முழுவதும் சுற்றிப் பார்த்துச்சென்றார்.

அவரது ஆய்வின் போது கலவைத் தாசில்தார் வட்டவழங்கல் அலுவலர்,வருவாய் ஆய்வாளர்,மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 23 Jun 2021 3:27 PM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி அருகே அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மிதிவண்டிகள்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
  3. நாமக்கல்
    மேல்நிலைப்பள்ளிகளுக்கு 9 நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்க கோரிக்கை
  4. தொழில்நுட்பம்
    ChatGPT News Features: ChatGPT இப்போது பார்க்கிறது, கேட்கிறது மற்றும்...
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் செப். 28, அக். 2 ல் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட...
  6. க்ரைம்
    வந்தவாசி அருகே பள்ளி மாணவியை கொலை செய்த காதலன் கைது
  7. தஞ்சாவூர்
    Thanjavur News Today தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்
  8. லைஃப்ஸ்டைல்
    lignocaine hydrochloride gel uses tamil அரிப்பு ,வலிகளைக் குறைக்கவும்...
  9. இந்தியா
    Man lighting up beedi in Delhi Metro: டெல்லி மெட்ரோ ரயிலில் பீடியை...
  10. தமிழ்நாடு
    yercaud flower show 2022: இயற்கை எழில் கொஞ்சும் ஏற்காடு...