சட்டவிரோதமாக குவாரியில் இருந்த ஜெலட்டின் குச்சிகள் வெடித்து அழிப்பு

ஆற்காடு அருகே மூடியுள்ள கல்குவாரியில் சட்டவிரோதமாக கற்களைத் தகர்க்க வைத்திருந்த ஜெலட்டின் குச்சிகள் வெடித்து அழிக்கப்பட்டது

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
சட்டவிரோதமாக குவாரியில் இருந்த  ஜெலட்டின் குச்சிகள் வெடித்து அழிப்பு
X

ஜெலட்டின் குச்சிகளை அகற்றும் பணியில் கனிம வளத்துறையினர்

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த பூட்டுத்தாக்கு அருகே நாராயணபுரம் பகுதியில் உள்ள மலையில் கடந்த 20ஆண்டாக கல்குவாரியை குத்தகை எடுத்து தனியார் நிறுவனம் இயங்கியது. குத்தகைக்காலம் முடிவடைந்தும் குவாரி கள்ளத்தனமாக நடந்த நிலையில் அதிகாரிகள் நடவடிக்கையால் மூடப்பட்டது.

இருப்பினும் கடந்த 2 ஆண்டுகளாக அதே பகுதியைச்சேர்ந்த சிலர் கள்ளத்தனமாக தொடர்ந்து பாறைகளை வெடிவைத்து தகர்த்து கற்களை திருடி விற்றுவந்தனர் . இதுகுறித்து, கிராம மக்கள் கடந்த ஆண்டு இராணிப்பேட்டை சப்கலெக்டர் இளம் பகவத்திடம் முறையிட்டனர். அதன்பேரில், சட்டவிரோதமாக செயல்பட்டுவந்த குவாரி நிரந்தரமாக மூடிவைக்கப்பட்டது..

ஆனால், அப்போது பாறைகளை வெடிவைத்து தகர்க்க மலையில் துளையிட்டு வைத்த ஜெலட்டின் குச்சிகளை அகற்றாமல் அப்படியே விடப்பட்டதால், அவை எந்நேரமும் வெடிக்கும் அபாயத்தில் இருந்து வந்தது.

இதனால்., நாராயணபுரம் கிராமமக்கள் ஆடுமாடுகளை மேய்க்க அப்பகுதிவழியாக அச்சத்துடன் செல்ல வேண்டியிருந்ததால், பாதுகாப்பின்றி எந்நேரமும் வெடிக்கும. நிலையில் உள்ள ஜெலட்டின் குச்சிகளை அகற்றிட வேண்டி கோரிக்கைவிடுத்தனர்.

இதனையடுத்து, கனிமவளத்துறையினர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் குவாரிப்பகுதியினை ஆய்வு அவற்றை வெடிக்கச்செய்தனர். இதனால் பெரும் அச்சத்திலிருந்த மக்கள் நிம்மதியடைந்தனர் .

மேலும் அரசு மூடிய குவாரியில் சட்டவிரோதமாக துளையிட்டு வைத்த ஜெலட்டின் குச்சிகளை வைத்தவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்ககோரி கனிமவள அதிகாரிகள் இரத்தினகிரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Updated On: 26 Oct 2021 5:51 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    இந்திக்கு செல்லும் லவ்டுடே! யார் நடிக்கிறாங்க தெரியுமா?
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. லைஃப்ஸ்டைல்
    oregano meaning in tamil: ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஆர்கனோ இலைகள்
  5. டாக்டர் சார்
    அம்மாடியோவ்! பெருஞ்சீரகத்தில் இத்தனை மருத்துவக் குணங்களா?
  6. சினிமா
    அஜித்குமார் 62... கோபமாக பதிலளித்த விக்னேஷ் சிவன்!
  7. தொழில்நுட்பம்
    36 செயற்கைக்கோள்களுடன் மிகப்பெரிய LVM3 ராக்கெட்டை விண்ணில் செலுத்திய...
  8. இராசிபுரம்
    ராசிபுரம் அருகே பன்றிகளுக்கு வைரஸ் பாதிப்பு, அச்சப்பட வேண்டாம்:...
  9. தமிழ்நாடு
    சக்தியா.. அறிவியலா..? சூறைக்காற்றில் சாய்ந்த மரம் தானாக எழுந்து நின்ற...
  10. விழுப்புரம்
    விக்கிரவாண்டி கடைவீதியில் 12 மணி நேர மின் நிறுத்தம்: வியாபாரிகள்...