/* */

அரிசி ஆலையிலிருந்து வெளியேறும் உமி தூசி: பொது மக்களுக்கு மூச்சுத்திணறல்

திமிரி குமரன் நகரில் தனியார் மாடர்ன் அரிசி ஆலையிலிருந்து உமி தூசிகள் வெளியேறி பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாக புகார்

HIGHLIGHTS

அரிசி ஆலையிலிருந்து வெளியேறும் உமி தூசி: பொது மக்களுக்கு மூச்சுத்திணறல்
X

அரிசி ஆலை தூசி காரணமாக மூச்சுத்திணறல் ஏற்படுவதாக கூறும் பொதுமக்கள் 

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பேரூராட்சிக்கு உட்பட்ட குமரன் நகர் ,வள்ளலார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அவற்றில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர் .

இந்த நிலையில் அதே பகுதியில் தனியாருக்கு சொந்தமான மாடர்ன் ரைஸ்மில் இயங்கி வருகின்றது. அதிலிருந்து கடந்த சில மாதங்களாக நெல் அரவையின் போது உமி தூசிகள் வெளியேறி குடியிருப்பு மற்றும் சுற்றுவட்டாரங்களில் சூழ்ந்தும் படர்ந்தும் வருகிறது .

இதனால் அப்பகுதியில் வசித்து வரும் முதியவர்கள் குழந்தைகள் உட்பட அனைவருக்கும் மூச்சுத்திணறல், கண்ணெரிச்சல் போன்ற உபாதைகளால் பாதிப்புக்குள்ளாகி அவதியடைந்து வருவதாக கூறுகின்றனர்..

மேலும், தூசிகள் அப்பகுதி வீடுகள், சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் தூசி அடுக்குகளாக படர்ந்து அழுக்கடைந்து காணப்பட்டு வருகிறது .

இதனால் மக்கள் தாங்கமுடியாத வேதனையில் வீடுகளை விட்டு வெளியேறமுடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டிய சூழலில் உள்ளதாக வேதனைத் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அப்பகுதியினர் பலமுறை திமிரி பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகளிடம் முறையிட்டு வந்துள்ளதாகவும் ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் அதிகாரிகள் உள்ளதாக குறைகூறி வருகின்றனர்.

எனவே, அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Updated On: 19 Dec 2021 10:22 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    சுட்டெரிக்கும் வெயிலில் கிரிவலப் பாதை தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மை...
  2. நாமக்கல்
    அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான புத்தங்கள்...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கூடுதல் பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் அவதி
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி : 2ம் நாளான நேற்று ஆயிரக்கணக்கில்...
  6. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  7. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  8. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  9. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  10. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!