/* */

கலவையருகே நீச்சல் தெரியாத இரண்டு சிறுமிகள் குட்டையில் மூழ்கி பலியான சோகம்.

கலவையடுத்த செங்காவனத்தில் நீச்சல் தெரியாத இரண்டு சிறுமிகள் குட்டையில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்

HIGHLIGHTS

கலவையருகே நீச்சல் தெரியாத இரண்டு சிறுமிகள் குட்டையில் மூழ்கி பலியான சோகம்.
X

இராணிப்பேட்டை மாவட்டம் கலவையடுத்த செங்காவனம்,மூதாக்கோயில் தெருவைச்சேர்ந்த மணி,லதா தம்பதியினரின் மகள் கீர்த்தி (8) மற்றும் அதே தெருவைச்சேர்ந்த ராஜீவ்காந்தி மணிமேகலை தம்பதியினர் மகள் கல்பனா (10). சிறுமிகள் இருவரும் அதே ஊரிலுள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர்.

கொரோனா ஊரடங்கால் பள்ளிக்கு விடுமுறை காரணமாக சிறுமிகள் வீட்டிலேயே இருந்து வந்தனர். இதனைத் தொடர்ந்து் கூலி வேலைசெய்து பிழைப்பு நடத்திவரும் இருவரது பெற்றோர்களும், நேற்று வழக்கம் போல சிறுமிகளை வீட்டிலேயே இருக்கும்படி கூறி விட்டு வேலைக்கு சென்று விட்டனர் .

இந்நிலையில், மாலை வீடுதிரும்பிய பெற்றோர்கள் சிறுமிகள் இல்லாததைக் கண்டு அவர்களைத் தேடினர். அப்போது, அங்குள்ள கீச்சங்குட்டை கரையில் சிறுமிகளின் உடைகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கூச்சலிட்டனர் .

உடனே அங்கு ஊர்மக்களில் சிலர் குட்டையில் இறங்கித்தேடினர். சுமார் ஒரு மணிநேர தேடுதலுக்கு பிறகு சிறுமிகள் கீர்த்தி, கல்பனா இருவரையும் சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவலறிந்த அங்குசென்ற கலவை சப்இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி மற்றும் போலீஸார் சிறுமிகளின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 15 July 2021 4:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளின் சூப்பர் ஹீரோ தாத்தாக்களே..!
  2. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  3. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  4. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  5. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  6. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  7. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  8. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  10. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!