கலவையருகே நீச்சல் தெரியாத இரண்டு சிறுமிகள் குட்டையில் மூழ்கி பலியான சோகம்.

கலவையடுத்த செங்காவனத்தில் நீச்சல் தெரியாத இரண்டு சிறுமிகள் குட்டையில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கலவையருகே நீச்சல் தெரியாத இரண்டு சிறுமிகள் குட்டையில் மூழ்கி பலியான சோகம்.
X

இராணிப்பேட்டை மாவட்டம் கலவையடுத்த செங்காவனம்,மூதாக்கோயில் தெருவைச்சேர்ந்த மணி,லதா தம்பதியினரின் மகள் கீர்த்தி (8) மற்றும் அதே தெருவைச்சேர்ந்த ராஜீவ்காந்தி மணிமேகலை தம்பதியினர் மகள் கல்பனா (10). சிறுமிகள் இருவரும் அதே ஊரிலுள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர்.

கொரோனா ஊரடங்கால் பள்ளிக்கு விடுமுறை காரணமாக சிறுமிகள் வீட்டிலேயே இருந்து வந்தனர். இதனைத் தொடர்ந்து் கூலி வேலைசெய்து பிழைப்பு நடத்திவரும் இருவரது பெற்றோர்களும், நேற்று வழக்கம் போல சிறுமிகளை வீட்டிலேயே இருக்கும்படி கூறி விட்டு வேலைக்கு சென்று விட்டனர் .

இந்நிலையில், மாலை வீடுதிரும்பிய பெற்றோர்கள் சிறுமிகள் இல்லாததைக் கண்டு அவர்களைத் தேடினர். அப்போது, அங்குள்ள கீச்சங்குட்டை கரையில் சிறுமிகளின் உடைகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கூச்சலிட்டனர் .

உடனே அங்கு ஊர்மக்களில் சிலர் குட்டையில் இறங்கித்தேடினர். சுமார் ஒரு மணிநேர தேடுதலுக்கு பிறகு சிறுமிகள் கீர்த்தி, கல்பனா இருவரையும் சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவலறிந்த அங்குசென்ற கலவை சப்இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி மற்றும் போலீஸார் சிறுமிகளின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 15 July 2021 4:37 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
  4. புதுக்கோட்டை
    உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
  5. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  6. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  7. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  8. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பெண் போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் வரவேற்பு
  10. கல்வி
    JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்...