கிணற்றில் தவறி விழுந்த சிறுமி: துரிதமாக மீட்ட தீயணைப்புப்படையினர்

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, கால் தவறி கிணற்றில் விழுந்த சிறுமியை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சாமந்திபுரம் புதுக்காலனி தெருவைச் சேர்ந்த வெங்கடேசன். அவரது மகள் மேனகா (15), அங்குள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று மாலை 6மணியளவில் அப்பகுதியில் உள்ள வயலில் மேனகா சென்ற போது, திடீரென மாடு ஒன்று சிறுமியைத் துரத்தியது. பயந்து ஓடிய சிறுமி மேனகா அங்குள்ள 75அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தார். கிணற்றில் தண்ணீர் குறைந்த அளவில் இருந்ததால் சிறுமி மேனகா லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

கிணற்றில் இருந்த பாறையைப் பற்றியபடி கூச்சலிட்டார். சிறுமியின் அலறலைக்கேட்ட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் வந்து் சிறுமியை மீட்க முயற்சியில் ஈடுபட்டனர். தகவலின் பேரில் ஆற்காடு தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் இருந்த சிறுமி லேசான காயத்துடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் மூலம் திமிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர் .திமிரி போலீஸார், இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 18 Jun 2021 4:59 AM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    பெருஞ்சீரகத்தில் கலப்படம்: கண்டறிவது எப்படி? உணவு பாதுகாப்பு அலுவலரின்...
  2. விளாத்திகுளம்
    விளாத்திகுளம் அருகே சூறைக்காற்று: 700க்கும் மேற்பட்ட வாழை மரங்கள்...
  3. சினிமா
    மும்பையில் வீடு வாங்கியுள்ள தமிழ் நடிகர்கள்!
  4. விழுப்புரம்
    காசநோய் குறித்து பொதுமக்களுக்கு ஆட்சியர் அறிவுரை
  5. தென்காசி
    தென்காசி மற்றும் மதுரை வழியாக காசிக்கு சிறப்பு சுற்றுலா ரயில்
  6. தென்காசி
    தென்காசி அரசு மருத்துவமனையில் இடுப்பு எலும்பு மூட்டு மாற்று அறுவை...
  7. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில், அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்டத்தில், அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவள்ளூர்
    பூட்டி கிடக்கும் நூலக கட்டடத்தை மீண்டும் திறக்க கிராம மக்கள்