/* */

கலவை கஜேந்திர வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் கோரிக்கை

கலவையை அடுத்த வாழைப்பந்தல் கஜேந்திர வரதராஜபெருமாள் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை

HIGHLIGHTS

கலவை கஜேந்திர வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் கோரிக்கை
X

வாழைப்பந்தல் கஜேந்திர வரதராஜபெருமாள் கோவில் 

கலவையை அடுத்த வாழைப்பந்தல் கிராமத்தின் மத்தியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருந்தேவி சமேத கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 1975-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.

கோவிலுக்கு சொந்தமாக 12 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தைக் குத்தகைக்கு விட்டு அதில் இருந்து பல லட்சம் ரூபாயை வசூல் செய்து வைத்துள்ளனர். கோவிலை பராமரிக்க வேண்டும் எனப் பக்தர்களும், பொதுமக்களும் சம்பந்தப்பட்ட அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தினர். ஆனால் கோவிலை பராமரிக்க யாரும் முன்வரவில்லை.

கோவிலின் ராஜகோபுரத்தில் ஏராளமான மரம், செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. கோவிலை சுற்றி முட்புதர்கள் உள்ளது. அதில் இருக்கும் விஷ உயிரினங்கள் கோவிலுக்குள் வலம் வருகின்றன. கோவிலை சுற்றி இருக்கும் சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அச்சப்படுகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அரசு அறநிலையத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ராஜகோபுரத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி, கோவிலை புதுப்பித்து, வர்ணம் பூசி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என ஊர் பொதுமக்களும், பக்தர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 14 Jun 2021 5:10 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  3. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  5. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  6. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  7. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  8. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  9. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  10. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!