/* */

கொசுக்களின் கூடாரமான கழிவு நீர் கால்வாயை சீரமைக்க கோரிக்கை.

கலவையில் துர்நாற்றம் வீசி கொசுக்கள் கூடாரமாக விளங்கும் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

HIGHLIGHTS

கொசுக்களின் கூடாரமான கழிவு நீர் கால்வாயை சீரமைக்க கோரிக்கை.
X

தூர் வாரப்படாமல் இருக்கும் கழிவுநீர் கால்வாய்

இராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேரூராட்சியில் சுமார்15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்துவருகின்றனர். அதில் சென்னசமுத்திரம் செல்லும் பிரதான சாலை கலவையிலுள்ள புகழ்பெற்ற கமலக் கன்னியம்மன் கோயில் , அங்காளம்மன்கோயில் மற்றும் முருகன் கோயில் ஆகியவற்றிற்கு செல்லும் முக்கிய சாலையில் உள்ளது. மேற்படி சாலையில் எப்போதுமே உள்ளூர்,வெளியூர் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும்.

இந்த கழிவுநீர்க் கால்வாய் பலமாதங்களாக தூர்வாரப்படாமல் உள்ளது.கழிவுநீர் தேங்கி அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதாகவும் தொற்று நோயைபரப்பும் கொசுக்களின் கூடாரமாக இருந்து வருவதாக பொதுமக்கள் புகார் கூறிவருகின்றனர்.

இதுதொடர்பாக கலவை மக்கள் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் கால்வாயை தூர்வாரி சீரமைக்கவேண்டி கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் நடவடிக்கை ஏதுமின்றி அப்படியே கழிவுநீர்தேங்கி துர்நாற்றம் வீசிவருவதாக கூறப்படுகிறது.

எனவே கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசிய நிலையில் உள்ள கால்வாயை விரைந்து சீரமைத்திட கலவைப் பொதுமக்கள் , சம்பந்தபட்ட பேரூராட்சி உயரதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

Updated On: 6 Nov 2021 1:48 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?