/* */

ரூ1 லட்சம் தந்தால் தினசரி 1கிராம் தங்கம்: பலே ஆசாமி கைது

ஆற்காட்டில் ரூ1 லட்சம் தந்தால் தினமும் 1 கிராம் தங்கக் காசு அளிப்பதாகக் கூறி தராமல் ஏமாற்றி மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர் .

HIGHLIGHTS

ரூ1 லட்சம் தந்தால் தினசரி 1கிராம் தங்கம்: பலே ஆசாமி கைது
X

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சடையாய் தெருவைச்சேர்ந்தவர் சுரேஷ்பாபு (47). இவர் கடந்த 2ஆண்டுகளாக அப்பகுதியில் ரூ,1 லட்சம் தந்தால் தினமும் 1 கிராம் அளவுக்கு தங்கக்காசு வழங்குவதாக ஆசைவார்த்தைக் கூறி, பலரிடம் லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்றுள்ளார்.

அதில், ஆற்காடு தாஜ்புராவைச் சேர்ந்த திருநாவுக்கரசு ரூ,7லட்சமும்,செல்வம் என்பவர் ரூ,20 லட்சம், ஜமீல்பாஷா ரூ,3லட்சம், ராமு ரூ2 லட்சம் என பலரும் சுரேஷ்பாபுவிடம் லட்சக்கணக்கில் கொடுத்துள்ளனர்.

ஆனால், சுரேஷ்பாபு, சொன்னபடி யாருக்கும் தங்கக்காசை வழங்காமல் ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் பணத்தைத் திருப்பிக் கேட்டதற்கு அவர் ,பணத்தை ஷேர்மார்க்கெட்டில் முதலீடு செய்துள்ளதாகவும் பணத்தைத் திருப்பித்தர காலதாமதாகும் என்று கூறியதாக தெரிகிறது. .

இதனையடுத்து திருதாவுக்கரசு ,செல்வம், ஜமீல்பாஷாமற்றும் ராமு ஆகியோர் ஆற்காடு டவுன் காவல் நிலையத்தில் சுரேஷ்பாபு மீது புகார் அளித்தனர். புகாரின்பேரில் விசாரித்த போலீசார் சுரேஷ்பாபுவை கைது செய்து சிறையிலடைத்தனர்..

Updated On: 5 Dec 2021 1:42 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    சிவில் சர்வீஸ் தேர்வில் 851-ஆவது ரேங்க் எடுத்து தென்காசியை சேர்ந்த...
  2. உலகம்
    ஒரு கண்ணில் வெண்ணை! மறு கண்ணில் சுண்ணாம்பு! நெஸ்லேயின் தகிடுதத்தம்
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை குளிர்விக்கும் இயற்கை உணவுகள்
  4. குமாரபாளையம்
    அரசு மருத்துவமனைக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய ஜவுளி
  5. உலகம்
    உலக பாரம்பரிய தினம் எதுக்கு கொண்டாடறோம் தெரியுமா..?
  6. உலகம்
    துபாயில் வெள்ளம்: விமான சேவை ரத்து! தண்ணீரில் சிக்கிய வாகனங்கள்
  7. உலகம்
    எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பிள்ளைக்கு நீங்கள் 'சூப்பர் ஹீரோ'வா?
  9. தேனி
    தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களே.. உங்களுக்கு ஒரு பணிவான...
  10. தேனி
    கைகளில் மருதாணி, மெகந்தி போட்டவர்களும் வாக்களிக்கலாம்!