ரூ1 லட்சம் தந்தால் தினசரி 1கிராம் தங்கம்: பலே ஆசாமி கைது

ஆற்காட்டில் ரூ1 லட்சம் தந்தால் தினமும் 1 கிராம் தங்கக் காசு அளிப்பதாகக் கூறி தராமல் ஏமாற்றி மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர் .

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ரூ1 லட்சம் தந்தால் தினசரி 1கிராம் தங்கம்: பலே ஆசாமி கைது
X

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சடையாய் தெருவைச்சேர்ந்தவர் சுரேஷ்பாபு (47). இவர் கடந்த 2ஆண்டுகளாக அப்பகுதியில் ரூ,1 லட்சம் தந்தால் தினமும் 1 கிராம் அளவுக்கு தங்கக்காசு வழங்குவதாக ஆசைவார்த்தைக் கூறி, பலரிடம் லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்றுள்ளார்.

அதில், ஆற்காடு தாஜ்புராவைச் சேர்ந்த திருநாவுக்கரசு ரூ,7லட்சமும்,செல்வம் என்பவர் ரூ,20 லட்சம், ஜமீல்பாஷா ரூ,3லட்சம், ராமு ரூ2 லட்சம் என பலரும் சுரேஷ்பாபுவிடம் லட்சக்கணக்கில் கொடுத்துள்ளனர்.

ஆனால், சுரேஷ்பாபு, சொன்னபடி யாருக்கும் தங்கக்காசை வழங்காமல் ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் பணத்தைத் திருப்பிக் கேட்டதற்கு அவர் ,பணத்தை ஷேர்மார்க்கெட்டில் முதலீடு செய்துள்ளதாகவும் பணத்தைத் திருப்பித்தர காலதாமதாகும் என்று கூறியதாக தெரிகிறது. .

இதனையடுத்து திருதாவுக்கரசு ,செல்வம், ஜமீல்பாஷாமற்றும் ராமு ஆகியோர் ஆற்காடு டவுன் காவல் நிலையத்தில் சுரேஷ்பாபு மீது புகார் அளித்தனர். புகாரின்பேரில் விசாரித்த போலீசார் சுரேஷ்பாபுவை கைது செய்து சிறையிலடைத்தனர்..

Updated On: 5 Dec 2021 1:42 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    மேக்கிங் வீடியோ வெளியிட்ட லியோ படக்குழு
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த பயிலரங்கம்
  3. தமிழ்நாடு
    ராமேஸ்வரம் கோவிலில் உள்ள ஓலைச்சுவடிகளை காட்சிப்படுத்த கோரிக்கை
  4. தமிழ்நாடு
    அவசரமாக அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை: தமிழக அரசியலில் புது குழப்பம்?
  5. உடுமலைப்பேட்டை
    அணைகள் கட்ட நிதி ஒதுக்காத தமிழக அரசு; பட்ஜெட் அறிவிப்பில் விவசாயிகள்...
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டை அலங்கரிக்கும் பொம்மைகள்: பராமரிப்பது எப்படி என்பது தெரியுமா?
  7. தாராபுரம்
    தாராபுரம்; திருமண நாளில், மணப்பெண் ‘எஸ்கேப்’
  8. திருப்பூர்
    திருப்பூர்; ரேஷன் கடைகளில், 5 கிலோ கேஸ் சிலிண்டர் வினியோகம்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட ஏரி, குளங்களில் சவுடு மணல் அள்ளுவதற்கு அனுமதி
  10. காஞ்சிபுரம்
    வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதி