/* */

மாங்குப்பத்தில் களைகட்டியது எருது விடும் திருவிழா

ரத்தினகிரி அருகே மாங்குப்பம் பொன்னியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 50 ம் ஆண்டு எருது விடும் திருவிழா விமரிசையாக நடந்தது.

HIGHLIGHTS

மாங்குப்பத்தில் களைகட்டியது எருது விடும் திருவிழா
X

எருது விடும் திருவிழாவில் சீறிப்பாயும் காளை 

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மாங்குப்ப கிராம தேவதையான பொன்னியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் மயிலேறு தினத்தன்று கோலாகலமாக நடந்து வருகிறது . விழாவில் கடந்த 50ஆண்டுகளாக காளைவிடும் நிகழ்ச்சி புகழ்பெற்ற விழாவாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டும் வழக்கம்போல எருது விடும் திருவிழா வெகுவிமரிசையாக நடந்த்து. விழாவில் ராணிப்பேட்டை வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகம் ஆகிய வெளிமாநிலங்களில் இருந்தும் 500 க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டது .

காளைகளை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்த பின்பு அனுமதித்தனர். ஒவ்வொரு காளையையும் மூன்று சுற்றுகள் ஓடவிட்டு சராசரி நேரத்தை கணக்கிட்டு முடிவுகள் அறிவிக்கப் பட்டன. போட்டியில் வென்ற காளைகளுக்கு முதல்பரிசாக 1,லட்சம் ரொக்கம், என மொத்தம் 16 பரிசுகள் வழங்கப்பட்டன.

திருவிழாவில், ஊர்பொதுமக்கள், காளைகளின் உரிமையாளர்கள் , பார்வையாளர்கள் என திரளானோர் கலந்துகொண்டு சீறிப்பாய்ந்த காளைகளைக்கண்டு ரசித்தனர்.

Updated On: 22 Jan 2022 2:34 PM GMT

Related News