/* */

தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களுக்கு யோகா பயிற்சி

அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் யோகா மற்றும் தியானப் பயிற்சிகள் நடைபெற்றது

HIGHLIGHTS

தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களுக்கு யோகா பயிற்சி
X

யோகா பயிற்சி மேற்கொள்ளும் தேசிய பேரிடர் மீட்பு படையினர்

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை மையம் உள்ளது. இங்கு, 500க்கும் மேற்பட்ட மீட்புப் படை வீரர்கள் உள்ளனர்.

இவர்கள் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பெரும் ஆபத்துகளிலிருந்து பொதுமக்களை மீட்பது, முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட பல பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையிலும், புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும், யோகா மற்றும் தியானப் பயிற்சிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

அதன்படி, தேசிய பேரிடர் மீட்பு படை மைய வளாகத்தில் துணை கமாண்டன்ட் வைத்திலிங்கம் தலைமையில் மீட்பு படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒரே நேரத்தில் தியானம் மற்றும் யோகா உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டனர்.

Updated On: 26 Feb 2022 7:34 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?