தண்டவாளத்தில் மது அருந்திய வாலிபர்கள் ரயிலில் அடிபட்டு பலி
அரக்கோணம். அருகே தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்து கொண்டிருந்த இரண்டு வாலிபர்கள் இரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர்
HIGHLIGHTS
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சேந்தமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் பார்தசாரதி(30), கிருஷ்ணன்( 27) நண்பர்களான இருவரும் கூலித்தொழில் செய்து வந்தனர். மேலும் சுகுமாருக்கு திருமணமாகி 7 மாதங்கள் ஆன நிலையில் அவரது மனைவி கர்ப்பமாக உள்ளார்.
இந்நிலையில் நண்பர்கள் இருவரும் சேர்ந்து இரவு அதேப்பகுதியில் உள்ள ஓட்டல்அருகே அரக்கோணத்திலிருந்து காஞ்சிபுரம் செல்லும் இரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தி போதையில் கிடந்தனர். அப்போது ,இரயில் வருவதைக் கண்ட சுகுமார் சுதாரித்து எழுந்து விலகி நண்பர் பார்த்தசாரதியை எழுப்பியுள்ளார்.
ஆனால் ,அதிக போதையில் இருந்த பார்த்தசாரதியால் எழுந்திருக்க முடியாமல் தண்டவாளத்திலேயே கிடந்தார். இதனால் நண்பனைக் காப்பாற்ற சுகுமார் முயற்சித்தார். அதற்குள் இரயில் இருவர்மீதும். மோதியது. இதில் படுகாயமடைந்த பார்த்தசாரதி,சுகுமார் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்
இதுகுறித்து தகவலறிந்து வந்த இரயில்வேப் போலீசார் சடலங்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்பு ,போலீசார் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.