/* */

தண்டவாளத்தில் மது அருந்திய வாலிபர்கள் ரயிலில் அடிபட்டு பலி

அரக்கோணம். அருகே தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்து கொண்டிருந்த இரண்டு வாலிபர்கள் இரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர்

HIGHLIGHTS

தண்டவாளத்தில் மது அருந்திய வாலிபர்கள் ரயிலில் அடிபட்டு பலி
X

மாதிரி படம்

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சேந்தமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் பார்தசாரதி(30), கிருஷ்ணன்( 27) நண்பர்களான இருவரும் கூலித்தொழில் செய்து வந்தனர். மேலும் சுகுமாருக்கு திருமணமாகி 7 மாதங்கள் ஆன நிலையில் அவரது மனைவி கர்ப்பமாக உள்ளார்.

இந்நிலையில் நண்பர்கள் இருவரும் சேர்ந்து இரவு அதேப்பகுதியில் உள்ள ஓட்டல்அருகே அரக்கோணத்திலிருந்து காஞ்சிபுரம் செல்லும் இரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தி போதையில் கிடந்தனர். அப்போது ,இரயில் வருவதைக் கண்ட சுகுமார் சுதாரித்து எழுந்து விலகி நண்பர் பார்த்தசாரதியை எழுப்பியுள்ளார்.

ஆனால் ,அதிக போதையில் இருந்த பார்த்தசாரதியால் எழுந்திருக்க முடியாமல் தண்டவாளத்திலேயே கிடந்தார். இதனால் நண்பனைக் காப்பாற்ற சுகுமார் முயற்சித்தார். அதற்குள் இரயில் இருவர்மீதும். மோதியது. இதில் படுகாயமடைந்த பார்த்தசாரதி,சுகுமார் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்

இதுகுறித்து தகவலறிந்து வந்த இரயில்வேப் போலீசார் சடலங்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்பு ,போலீசார் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 21 Nov 2021 1:51 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?