/* */

வாலிபர் மரணத்தில் சந்தேகம்: போலீஸில் தந்தை புகார்

அரக்கோணம் அருகே நண்பர்களுடன் சென்ற வாலிபர் திடீர் மரணம் அடைந்ததால், கொலை செய்யப்பட்டதாக தந்தை போலீஸில் புகார் அளித்துள்ளார்.

HIGHLIGHTS

வாலிபர் மரணத்தில் சந்தேகம்: போலீஸில் தந்தை புகார்
X

சந்தேகத்திற்கிடமாக மரணமடைந்த அருண்

இராணிப்பேட்டை மாவட்டம் ,அரக்கோணம் அடுத்த அவினாசி கண்டிகை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் அருண்(32). திருமணம் ஆகாதவர். கூலித் தொழிலாளியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்த சென்றார். பின்பு அவர்,. நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவேயில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் பல இடங்களில்அவரை தேடியுள்ளனர்.

அப்போது, அங்குள்ள பச்சை அம்மன் கோயிலருகே அருண் சடலமாக இருந்தகண்டு அதிர்ச்சியடைந்து உள்ளனர். ஆயினும் போதையில் கீழே விழுந்து இறந்த இருக்கலாம் என்று எண்ணிய அருண் குடும்பத்தினர் அவரது உடலை அடக்கம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அருண் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை கோவிந்தராஜ் அரக்கோணம் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து புதைக்கப்பட்டுள்ள அருண் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்துவருகின்றனர். மேலும், கடைசியாக அருணுடன் சேர்ந்து மது அருந்தியவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 26 Oct 2021 11:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  2. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  3. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  4. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  7. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  8. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  9. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...