Begin typing your search above and press return to search.
அரக்கோணத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
தனியார் துறை மூலம் வேலைவாய்ப்பு முகாம் அரக்கோணத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் தேதி நடைபெறுகிறது
HIGHLIGHTS
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிர் திட்டம் சார்பில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த கிராமப்புறத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு தனியார் துறை மூலம் வேலைவாய்ப்பு அளித்திட வருகிற 10-ந் தேதி அரக்கோணத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள இருப்பதால் வேலை நாடுபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.