/* */

அளவுக்கதிகமாக மாத்திரைகளை சாப்பிட்ட முன்னாள் கடற்படை வீரர் பலி

அரக்கோணத்தில் மருத்துவர் ஆலோசனையின்றி கடைகளில் மாத்திரைகளை வாங்கி அளவுக்கதிகமாக சாப்பிட்ட முன்னாள் கடற்படைவீரர் பலியானார்

HIGHLIGHTS

அளவுக்கதிகமாக மாத்திரைகளை சாப்பிட்ட முன்னாள் கடற்படை வீரர் பலி
X

மாதிரி படம்

இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், அருகே வெங்கடேசபுரம் அகன் நகரை சேர்ந்த மோகன்ராவ்(42). முன்னாள் கடற்படை வீரர். இவர், கடந்த 19-ம் தேதி அன்று உடல்நிலை பாதிப்படைந்து அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் பரிசோதித்தில் அவருக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சனை இருந்தது தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து,. நரம்பியல் சார்ந்த சிகிச்சைக்காக அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆயினும், மோகன்ராவ் சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார்.

இந்நிலையில், சிகிச்சையின்போது மோகன்ராவிற்கு எடுக்கப்பட்ட பரிசோதனை விபரங்களில் அவர் சந்தேகப்படும் விதத்தில் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை எடுத்துக்கொண்டதன் காரணமாக இறந்தது தெரியவந்தது. எனவே, மருத்துவர்கள் உறவினர்களிடம் விசாரித்தபோது, மோகன்ராவ், உடல்நிலை பாதிப்பின் போதெல்லாம் டாக்டர் ஆலோசனையைப் பெறாமல் தானே சுயமாகவே மருந்துகளை கடைகளில் வாங்கி உட்கொண்டது தெரிய வந்தது.

இதனையடுத்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது . அதன்பேரில் அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 24 Sep 2021 10:52 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
  2. திருவண்ணாமலை
    12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச...
  4. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  5. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  7. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  9. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  10. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு