/* */

ராணிப்பேட்டையில் கொரோனா 3வது அலை தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம்

ஆறகாட்டில் சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியில் கொரோனா மூன்றாவது அலை தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

ராணிப்பேட்டையில் கொரோனா 3வது அலை தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம்
X

ராஷ்ட்ரசேவிகா சமிதி சார்பாக நடந்த கொரோனா 3வது அலை தடுப்பு விழிப்புணர்வு முகாம்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் உள்ள சரஸ்வதி வித்யாமந்திர் பள்ளி மற்றும் ராஷ்ட்ரசேவிகா சமிதி சார்பாக பள்ளி வளாகத்தில் கொரோனா 3வது அலை தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது .

முகாமிற்கு ,பள்ளி உதவி தலைமையாசிரியை சித்திரகுமாரி தலைமைதாங்கினார். தலைமையாசிரியர் நாகராஜன் நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். ஆசிரியை ஜெயல்லிதா கணேஷ் வரவேற்பு உரையாற்றினார். ஹேமப்பிரியா தனிப்பாடல் பாடினார்.

பின்னர், பள்ளிஆசிரியைகள் உமாதேவி, ப்ரீதி,பவானி ஆகியோர் நிகழ்ச்சியில் நோய் தடுப்பு வழிமுறைகளாக யோகாசனம், சூரியநமஸ்காரம் பள்ளி விடுமுறையின் போது குழந்தைகளுக்கு ஊக்கம் தரும் விளையாட்டு அவற்றின் நன்மைகள் குறித்து செய்து காட்டி விளக்கமளித்தனர்.

முகாமின் சிறப்பு அழைப்பாளர்கள் குடும்பநல மருத்துவர் அல்லிராணி நோய்தொற்று பரவாமல் முகக்கவசம் சமூக இடைவெளி கிருமிநாசினி போன்றவற்றை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். மருத்துவ ரீதியில் பாதுகாத்துக் கொள்ளும் விதமான ஆலோசனைகளை வழங்கினார்.

அவரைத்தொடந்து பேசிய கோமதி நவீன், மன ரீதியான ஆலோசனைகளை வழங்கினார். முகாமிற்கு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரின் தாய்மார்கள் மற்றும் அப்பகுதி பெண்கள் பலரும் கலந்து கொண்டு யோகாசனம் மற்றும் மூச்சுப் பயிற்சியினை செய்வதை கற்றுச் சென்றனர்.

Updated On: 28 July 2021 4:12 PM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  3. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...
  4. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  5. வீடியோ
    🔴LIVE : தயாநிதி மாறனை எதிர்த்து அண்ணாமலை மத்திய சென்னையில் சூறாவளி...
  6. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  7. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  8. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  9. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  10. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...