/* */

ஏடிஎம்ஐஉடைத்து பணம் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை

அரக்கோணம் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ் சாலையில் ஏடிஎம்ஐ உடைத்து பணம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்

HIGHLIGHTS

ஏடிஎம்ஐஉடைத்து பணம் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை
X

கொள்ளையிடப்பட்ட வங்கி ஏடிஎம்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பெருங்களத்தூர் கிராமத்தில் தனியார் கல்லூரி உள்ளது. அதன் எதிரே ஆக்சிஸ் வங்கியின் ஏடிஎம் மையம்செயல்பட்டு வருகிறது. அந்த இயந்திரத்தில் கடந்த 15ந்தேதி வங்கியின் மூலம் ₹8லட்சத்து 50ஆயிரத்தை நிரப்பியுள்ளனர்.

இந்நிலையில், இரவு மர்ம நபர்கள் ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்து வெல்டிங் மிஷன் மூலமாக ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதிலிருந்த ரூ. 3 லட்சத்து 91 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது குறித்து தகவலறித்த அரக்கோணம் தாலூக்கா போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

அப்போது, ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமரா பழுதடைந்த நிலையில் பாதுகாவலர்கள் யாரும் இல்லாமல் இருந்ததையறித்த போலீஸார் சம்பந்தபட்ட வங்கி அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இருப்பினும், வங்கி அதிகாரிகள், தகவல் தெரிவித்தும் பல மணி நேரமாக வராமல் இருந்ததால் காத்திருந்தனர்.

பின்னர் அங்கு வந்த அரக்கோணம் காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் தலைமையில் ஆய்வாளர் சேதுபதி மற்றும் போலீஸார் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 17 Sep 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  2. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?
  4. அரசியல்
    "ஜெ.ஜெயலலிதா என்னும் நான்.." இந்த சிம்மக்குரல் மறைந்து மாயமானது..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் வளர்க்கக்கூடாத மரங்கள்; ஏன் என்று தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயிலை சமாளிக்க மட்டுமல்ல, உங்க ஆரோக்கியத்துக்கும் இளநீர்
  7. உத்திரமேரூர்
    ஓராண்டில் வாலாஜாபாத் ரயில்வே ஏற்றுமதி முனையம் சாதனை..!
  8. காஞ்சிபுரம்
    தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!
  9. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  10. குமாரபாளையம்
    ஜே.கே.கே.நடராஜா கலை, அறிவியல் கல்லூரி 50ம் ஆண்டு பொன் விழா..!