/* */

ராணிப்பேட்டையில் 80.89 சதவீத வாக்குப்பதிவு

ஊரக உள்ளாட்சித்தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவில் ராணிப்பேட்டையில் 80.89 சதவீதம் வாக்குப்பதிவு

HIGHLIGHTS

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, திமிரி, வாலாஜா ஆகிய 3 ஒன்றியங்களில்‌ நேற்று ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. ஆற்காடு ஒன்றியத்தில் மொத்தமுள்ள 86 ஆயிரத்து 686 வாக்குகளில் 72 ஆயிரத்து 138 வாக்குகள் பதிவாகியிருந்தது. இது 83.22 சதவீதமாகும். திமிரி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 85 ஆயிரத்து 893 வாக்குகளில் 71 ஆயிரத்து 637 வாக்குகள் பதிவாகி இருந்தது. இது 83.40 சதவீதமாகும்.

வாலாஜா ஒன்றியத்தில் மொத்தமுள்ள ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 786 வாக்குகளில் 99 ஆயிரத்து 189 வாக்குகள் பதிவாகி இருந்தது. இது 77.62 சதவீதமாகும். இந்த 3 ஒன்றியங்களில் மொத்தமுள்ள 3 லட்சத்து 365 வாக்குகளில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 964 வாக்குகள் பதிவாகி இருந்தது. இது 80.89 சதவீதம் ஆகும்.

வாலாஜா ஒன்றியத்தில் பதிவான வாக்குகள், வாக்குப்பெட்டிகளிள் வைத்து சீல்வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இப்பணியினை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

Updated On: 8 Oct 2021 11:20 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்: கோழிப்பண்ணைகளில் ஆட்சியர் ஆய்வு
  2. நாமக்கல்
    ஆதி திராவிடர், பழங்குயினர் மாணவர்களுக்கான ‘என் கல்லூரிக் கனவு’...
  3. நாமக்கல்
    முதியோருக்கு சேவை குறைபாடு: எஸ்பிஐ வங்கி ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க...
  4. மதுரை மாநகர்
    மதுரை கோயில்களில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே கோயில்களில் மெகா விருந்து
  6. இராஜபாளையம்
    காரியாபட்டி அருகே அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம்
  7. விளையாட்டு
    டி20 இந்திய அணி விக்கெட் கீப்பர் யாரு? சேவாக் யாருக்கு ஆதரவு...
  8. கல்வி
    வெளிநாட்டில் படிக்கணுமா..? கடன் விபரங்களை தெரிஞ்சுக்கங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண் சக்தியைப் போற்றும் மேற்கோள்கள்
  10. வீடியோ
    தொடங்குகிறது பாதயாத்திரை Part 2 | அதிரவைக்கும் அதிரடி Plan | Annamalai...