/* */

உப்பூரில் அரசு பேருந்து மீது வேன் மோதி விபத்து - போலீசார் விசாரணை

உப்பூரில் அரசு பேருந்து மீது வேன் மோதி விபத்து, சிறுவன் உள்பட 4 பேர் காயம். போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

உப்பூரில் அரசு பேருந்து மீது வேன் மோதி விபத்து - போலீசார் விசாரணை
X

உப்பூரில் அரசு பேருந்து மீது வேன் மோதி விபத்து, விபத்தில் சேதமடைந்த வேன்.

உப்பூரில் அரசு பேருந்து மீது வேன் மோதி விபத்து. சிறுவன் உள்பட 4 பேர் காயம்.போலீசார் விசாரணை.

திருவாடானை தாலுகா தொண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நம்புதாளையை சேர்ந்த கருமலை, நதியா, ராமலிங்கம், 10 வயது சிறுவன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் ஒரு வேனில் சித்தார்கோட்டையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்றனர். உப்பூர் கோவில் முன்பு முன்னாள் சென்ற பேருந்தை முந்த முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் பேருந்து மீது மோதியது. இதில் நால்வருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் மற்றவர்கள் எவ்வித ரத்தக் காயமும் இன்றிதப்பினர். காயமடைந்தவர்கள் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு மக்கள் பிரதிநிதிகளான ஊராட்சி மன்ற தலைவர், கவுன்சிலர் விரைந்து வந்து அவர்களுக்கு உதவினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. திருப்பாலைக்குடி போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 13 Oct 2021 4:28 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!
  2. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  3. ஆன்மீகம்
    தமிழர் புத்தாண்டு: மரபுகள் மற்றும் விருந்து!
  4. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  5. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...
  6. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  7. வீடியோ
    🔴LIVE : தயாநிதி மாறனை எதிர்த்து அண்ணாமலை மத்திய சென்னையில் சூறாவளி...
  8. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  9. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  10. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?