/* */

விமரிசையாக நடந்த வேலாங்குளம் அரிய நாச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

ராமநாதபுரம் மாவட்டம், வேலாங்குளம் ஸ்ரீ அரிய நாச்சியம்மன் கோவில் நூதன அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

HIGHLIGHTS

விமரிசையாக நடந்த வேலாங்குளம் அரிய நாச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
X

ஸ்ரீ அரிய நாச்சியம்மன் கோவில் கும்பத்திற்கு சிவாச்சாரியர்கள் மகா கும்பாபிஷேகம் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் அருகே நாரணமங்கலம் பஞ்சாயத்து வேலாங்குளம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ அரிய நாச்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் நூதன அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம், இன்று நடைபெற்றது.

முதல்நாள் நிகழ்ச்சியாக 14ம் தேதி மாலையில் மங்கல இசையுடன், பூஜைகள் தொடங்கின. அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம், பிரவேச பலி, ம்ருத் சங்கீரஹணம் ரக்ஷா பந்தனம், யாகசாலை, பிரவேசம் கட ஸ்தாபனம், தேவதா ஆவாஹனம் முதல் கால வேத பாராயணம், மற்றும் ஹோமங்கள் பூர்ணாஹீதீ அஷ்டாவதானம் தீபாரதனை மருந்து சாற்றுதல் ஏஜமானர் மரியாதையுடன் முதல் நாள் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.

அடுத்து, 15ம் தேதி காலை சுப்ரபாதம், கோ பூஜை, சூர்ய நமஸ்காரம், கலா ஆவாஹணம் நேத்ரோன்மீலனம், இரண்டாம் கால வேத பாராயணம், ஹோமங்கள் நாடி சந்தானம் மகா பூர்ணாஹுதி யாத்ரா தானம் பூஜைகள் நடத்தப்பட்டு கடம் புறப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்து, பின்னர் ஸ்ரீ அரிய நாச்சியம்மன் விமான கலச மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதை தொடர்ந்து மூலவர் அபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை வேலாங்குளம் எம்.கருப்பையா நாட்டாமை வகையாராக்கள் குடும்பத்தினர், பஞ்சாயத்து தலைவர் காளிமுத்து மற்றும் கிராமபொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர். பக்தர்களுக்கு அம்மனின் அருள் பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.

Updated On: 17 Sep 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!