/* */

இராமநாதபுரம் அருகே குடும்பத் தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: 3 பேர் கைது

இராமநாதபுரம் அருகே குடும்பத் தகராறு காரணமாக வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு. 3 பேர் கைது.

HIGHLIGHTS

இராமநாதபுரம் அருகே குடும்பத் தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: 3 பேர் கைது
X

இராமநாதபுரம் அருகே லாந்தை கண்ணந்தை கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார், 30. இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணி புரிந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மனைவி தெய்வானை. இவர்களது மகன் செந்தில்குமார் வெளிநாட்டில் வேலை செய்த வந்த இவர் சமீபத்தில் ஊர் திரும்பினார்.

சரத்குமார், முனியசாமி குடும்பம் இடையே குடும்ப தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் ரோமன் சர்ச் பெட்ரோல் பங்க் அருகே சரத்குமார் இன்று காலை நின்றார். அப்போது அங்கு வந்த முனியசாமி, தெய்வானை, செந்தில்குமார் ஆகியோர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரத்குமாரை வெட்டிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்..

படுகாயமடைந்த சரத்குமாரை அக்கம், பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சரத்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய செந்தில்குமார், முனியசாமி, தெய்வானை ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Updated On: 4 Sep 2021 1:50 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி