/* */

இலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த கடல் அட்டைகள் பறிமுதல்

இராமநாதபுரத்தில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த கடல் அட்டைகளை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.

HIGHLIGHTS

இலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த கடல் அட்டைகள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள்.

சென்னையில் உள்ள வனத்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இராமநாதபுரம் வனத்துறை அதிகாரிகள் தேவிப்பட்டினம் பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் தேவிப்பட்டினம் பெரியகடை கடற்கரை பகுதியில் உள்ள ஒரு குடோனில் கடல் அட்டைகளை பதப்படுத்தி பேக்கிங் செய்யும் பணி நடந்து வந்தது. வனத்துறையினர் சுற்றி வளைத்த போது, அங்கிருந்தவர்கள் தப்பி ஓடினர். அவர்களை விரட்டி பிடித்ததில் சித்திக் மற்றும் ஜாகிர் உசேன் ஆகிய இருவரும் பிடிபட்டனர்.

அவர்களிடமிருந்து 500 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் பலப்படுத்துவதற்கான தளவாட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்ட இருவரும் கைது செய்யப்பட்டு வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட கடல் அட்டைகள் சர்வதேச மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Updated On: 25 Oct 2021 5:29 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...